Electoral list Add – சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் தேர்தல் வர இருக்கிறது. எனவே தமிழகம் முழுவதும், இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் தற்போது மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர்.
இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர் மற்றும் பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர் ஆவார்கள்.இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர்.
மேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் கணக்கெடுப்பின்படி மொத்தம் 97 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் தற்போது வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் மூலம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார்.
இதன்படி , வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் தங்கள் பெயரை வரும் 23,24 ஆம் தேதிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் தங்கள் பெயர் சேர்க்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார்.