Edappadi Palaniswami :
Edappadi Palaniswami : சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, சென்னை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று வரவேற்றனர்.
இருப்பினும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை விமான நிலையத்திற்கு முதல்வரை நேரில் சென்று வரவேற்கவில்லை.
இது அங்கிருப்பவர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
அரசுமுறை வெளிநாட்டு பயணம் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதற்கு, வாழ்த்து தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அவரது இல்லத்திற்கே சென்று தனது வாழ்த்தை தெரிவித்தார்.