பட்டாஸ் படத்தை பற்றி இயக்குனர் பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் தற்போது இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க நேற்று இரவு இயக்குனர் துரை செந்தில் குமார் பதிவிட்டுள்ள டீவீட்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதாவது வேலை செய்ததற்காக கிடைக்கும் பலனும் வேலை செய்ததற்காக கேட்கும் கூலியும் ஒன்றாகுமா?#முதலாளித்துவம் என ட்வீட் செய்துள்ளார்.
இதனால் இவருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் எதோ தகராறா? சம்பளம் தரவில்லையா? என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
வேலை செய்ததற்காக கிடைக்கும் பலனும்
வேலை செய்ததற்காக கேட்கும் கூலியும்
ஒன்றாகுமா?#முதலாளித்துவம்— durai senthilkumar (@durairsk) January 14, 2020