சிவகார்த்திகேயன் தான் நடிக்கணும் என நடிகர் தனுஷ் கூடியதாக இருக்கும் எதிர்நீச்சல் பட இயக்குனர் கூறியுள்ளார்.
Durai Senthil Kumar About Ethir Neechal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மேடை கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தனுஷ் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த படத்தை தனுஷ் தயாரிக்க துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.
துரைசெந்தில்குமார் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் என்பதால் ஆடுகளம் படத்தின் போதே இந்த கதையை அவரிடம் கூறியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் தான் இந்த கதையை விட தனுஷிடம் சொல் என பரிந்துரை செய்துள்ளார். தனுஷும் கதை கேட்டு பிடித்துப் போக அதன் பின்னர் சிவகார்த்திகேயனிடம் கூறுமாறு சொல்லி உள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கும் கதை பிடித்துப் போக இந்த படம் உருவானது. இதுகுறித்து துரை செந்தில் கூறும்போது தனுஷ் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க வேண்டும், அனிருத் தான் இசை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
மேலும் கதாநாயகியாக இரண்டு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களுக்கு கால்ஷீட் இல்லாததால் பிரியா ஆனந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் எனக் கூறியுள்ளார்.