DMK Protest :
சென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை தீர்க்கக்கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க கோரி, இன்றுமுதல் மாவட்ட வாரியாக திமுக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை எடப்பாடி அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் திமுகவினர் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருச்சி,சென்னை,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அவசர ஆலோசனை கூட்டம்!!
தண்ணீர் தராத அரசை கண்டித்து திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெறும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.,
மேலும் சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் தமிழக அரசை எதிர்த்து தண்ணீர் தரவேண்டி போராட்டம் நடைபெற்று வருகிறது.
வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.