அரசு மரியாதை உடன் மண்ணுக்குள் மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவின் நடிகர் நடிகர் சங்கத் தலைவர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் இறங்கி வெற்றி கொண்டார்.
அதன் பிறகு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் முடங்கிய விஜயகாந்த் கடந்த ஓரிரு மாதம் ஆகவே மிகவும் முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து இவரது உடல் முதலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
அதன் பிறகு மக்களின் அஞ்சலிக்காக தீவு திடலில் வைக்கப்பட்டு மீண்டும் இன்று கட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அரசு மரியாதை உடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய நற்செயல்கள் என்றும் நம்மில் கலந்து இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.
ஓடி ஓடி உழைத்த நல்ல உள்ளம் இறைவன் அடியில் இளைப்பாறட்டும்.