தமிழ் இயக்குனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் வருஷம் எல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிசங்கர்.

பாக்யா என்ற பத்திரிக்கையின் குதிரை என்ற சிறுகதை எழுதி வந்த இவர் அதன் பிறகு பாக்கியராஜ், விக்ரமன் ஆகியோரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பிறகு வருஷம் எல்லாம் வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தோழி அந்த படத்தின் பாடல் வரிகள் அனைத்தையும் எழுதினார். அது மட்டுமின்றி சூரிய வம்சம் படத்தில் இடம் பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடல் வரிகளேயும் எழுதி இருந்தார்.

சென்னை கேகே நகரில் வசித்து வரும் இவர் நேற்று தனது வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் ரவி சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர். 

இயக்குனர் ரவிசங்கரின் இந்த மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.