விக்ரமை நான் நடிகன் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என தேவயானியின் கணவர் ராஜகுமாரன் கூறியுள்ளார்.
Director Rajakumaran About Vikram : தமிழ் சினிமாவில் நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் தனி இடம் பிடித்தவர் ராஜகுமாரன். அதன் பின்னர் இவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் விக்ரம், சரத்குமார் உட்பட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த படத்தின் போது சரத்குமாருக்கும் எனக்கும் வெட்டு குத்து லெவலில் பிரச்சனை இருந்தது உண்மை தான் என கூறியுள்ளார்.
ஆனால் விக்ரமுக்கும் எனக்கு பெரிதாக பிரச்சனை இல்லை தற்போது வரை நாங்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம். ஆனால் விக்ரம் இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு சுத்தமாக நடிக்க தெரியாது. குளோசப் ஷாட்டில் நடிக்கவே வராது. அப்போதெல்லாம் நான் விக்ரமை நடிகராகவே ஏற்றுக் கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். இவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரமும் ஒரு பேட்டி ஒன்றில் எனக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் பிடிக்கவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.