Web Ads

மறுமணம் செய்து கொள்ளாதது ஏன்? காரணத்தை சொன்ன நடிகர் பார்த்திபன்.!!

Web Ad 2

மறுமணம் செய்து கொள்ளாதது குறித்த காரணத்தை கூறியுள்ளார் பார்த்திபன்.

director parthiban latest speech update
director parthiban latest speech update

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகரும் இயக்குனர் ஆக பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பார்த்திபன். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் தமிழில் புதிய பாதை உள்ளே வெளியே ஹவுஸ் ஃபுல், யுவன், குடைக்குள் மழை, விந்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார்.

நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்ட இவர் பிறகு இதுவரை மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதற்கான காரணத்தையும் தற்போது தெரிவித்துள்ளார்

பார்த்திபன் மறுமணம் செய்து கொள்ளாதது குறித்து பேசி உள்ளார். சீதாவுக்கு பிறகு வேறு எந்த பெண்ணையும் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அதனால் தான் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் இந்த வேகமான உலகத்தில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால் அதனுடன் பயணிக்காமல் நினைவுகளுடன் பயணிக்க தொடங்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

director parthiban latest speech update
director parthiban latest speech update