Dhruv Vikram : விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.
இதுவரை இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது இதன் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுகலில் நடைபெற்று வருவதாகவும் மேலும் 65% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளனர்.
காதலருக்காக இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாரா சாய் பல்லவி – அட கொடுமையே!
இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பேசிய துருவ் விக்ரம், இரண்டாவது முறை செய்யும் காரியம் சிறப்பாக வராது என யார் சொன்னார்? என கூறியுள்ளார்.
இது பாலாவை அவர் கலாய்ப்பது போலவே இருப்பதாக பலரும் கூறுகின்றனர். மேலும் முதல் படம் வருவதற்கு முன்பாகவே இப்படியொரு ஆட்டிடூட் வேண்டாம் என்றும் ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.