குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடுவர்களாக செஃப் தாமு மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே இதற்கு முன் சௌந்தர்யா,கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா ஆகியோர் எலிமினேஷன் ஆனா நிலையில் அதனைத் தொடர்ந்து நான்காவது எலிமினேஷன் இந்த வாரம் நடந்துள்ளது.
நந்தகுமார்,ஷபானா,மதுமிதா மூவரும் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில் குறைவான மதிப்பெண்களை பெற்று மதுமிதா இந்த வாரம் வெளியேறி உள்ளார்.
இதனால் கோமாளிகள் பலரும் கண்ணீர் விட்டு உள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியாகி உள்ளது
