சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
CM Meeting at Tirunelveli : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக தென்மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுலா சென்றுள்ளார்.
முதலில் மதுரையில் ஆய்வு செய்த அவர் அடுத்ததாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.
இவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி வி.எம் ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே கோபால், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா முருகானந்தம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.கே அருண் சுந்தர் தயாளன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.