ஏ.ஆர்.முருகதாஸின் ‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு காரணம்: ராஷ்மிகா ஓபன் டாக்..

கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் கலவையான விமர்னங்களை பெற்றது.

இந்நிலையில் ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கத்​தில் சல்மான்கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்​தனா நாயகி​யாக நடித்​தார். சத்​ய​ராஜ், சர்​மான் ஜோஷி உள்பட பலர் நடித்​த இப்படம் கடந்த வருடம் வெளி​யானது. மிக​வும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி பட்​ஜெட்​டில் உருவாகி, வணி​கரீ​தி​யாகத் தோல்​வியைத் தழுவியது.

இப்படத்​தின் தோல்விக்கு சல்மான்கான் படப்​பிடிப்​புக்​குத் தாமதமாக வந்ததும் காரணம் என ஏ.ஆர்​.​முரு​க​தாஸ் கூறியிருந்​தார். அதற்கு சல்​மான் கான் பதிலடி கொடுத்திருந்​தார்.

இந்​நிலை​யில், ராஷ்மிகா மந்​தனா தெரிவிக்கையில், ‘சிக்கந்​தர் கதை பற்றி முருக​தாஸ் சாருடன் பேசி​யது நினைவிருக்கிறது. அந்தக்கதை உண்​மை​யில் முற்​றி​லும் சுவாரஸ்​ய​மாக​வும் மாறு​பட்​ட​தாக​வும் இருந்​தது. பிறகு படப்​பிடிப்​பில் நடந்தவை வித்​தி​யாச​மாக இருந்​தன.

பொது​வாக சில படங்களில் அப்​படித்​தான் நடக்​கும். ஒரு கதையைக் கேட்கும்​போது, அது ஒன்​றாக இருக்​கும். திரைப்​பட​மாக உரு​வாகும் கால​கட்​டத்​தில், நடிகர்​களின் நடிப்​புக்கு ஏற்ப, படத்​தொகுப்​புக்கு ஏற்ப, பல விஷ​ங்கள் மாறும். அது சினிமா​வில் சகஜம்தான். ‘சிக்​கந்​தர்’ படத்​தி​லும் அது நடந்தது’ என கூறியுள்​ளார்​.

changed the script of sikandar rashmika information
changed the script of sikandar rashmika information