விவேக்கின் மரணத்திற்குப் பிறகு அவருடைய உயிர் தோழன் செல் முருகன் பதிவிட்ட பதிவு ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

Cel Murugan Emotional About Vivekh : தமிழ்ச் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் நேற்று முன்தினம் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌. இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நடிகர் விவேக்கின் உதவியாளரும் அவருடைய நெருங்கிய நண்பருமாகிய செல் முருகன் பதிவிட்ட பதிவு பலரையும் கலங்க வைத்துள்ளது.

அந்த பதிவில் ஓர் மரணம் என்ன செய்யும்? சிலர் ப்ரொபைலில் கருப்பு வைப்பார்கள், சிலர் ஸ்டேஸ்ஸஸ்ஸில் புகைப்படம் வைப்பார்கள், சிலர் ரிப் என பதிவிடுவார்கள், சிலர் கண்ணீர் குறியீட்டுடன் பதிவு செய்வார்கள், ஆனால் அண்ணா உன்னுடைய உண்மையான ஜூவன், உன் உயிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண சென்றாயோ. இங்கு எல்லாரும் முருகன்தான் துணை என்று கூறுவார்கள். இனி என் முருகனுக்கு யார்? துணை விடை இல்லாமல் விரக்தியில் கேட்கிறேன்.? இனி அவனுக்கு யார் துணை? யார் துணை? யார் துணை? என் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.