முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் எதிராக வலுவான ஆதரங்களை சேகரிக்கும் முயற்சியில் சிபிஐ தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
CBI Enquiry with Chidambaram pa KVK Perumal – ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ கைது செய்த விவகாரம் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு எதிரான வழக்கை வலுப்படுத்தும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது அவரின் நடவடிக்கைகள் பற்றி தெரிந்த, அவருக்கு நெருக்கமானவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். இதில் சிதம்பரத்தின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கே.வி.கே பெருமாளை விசாரணை செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ளது.
படுக்கை அறையில் பாம்புகள் உல்லாசம் – அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
2010ம் ஆண்டு வரை சிதம்பரத்தின் நிழல் போல் இருந்தவர் கே.வி.கே. பெருமாள். எனவே, ஐ.என்.எக்ஸ் மீடிய குறித்த அனைத்த விவகாரமும் அவருக்கு தெரியும். குறிப்பாக இந்திராணியை எத்தனை முறை சிதம்பரம் சந்தித்தார். எங்கே சந்தித்தார் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பெருமாளுக்கு தெரியும். அவரின் விசாரணை நடத்துவதோடு, அவரை அப்ரூவராக மாற்றி சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரங்களை திரட்ட சிபிஐ திட்டமிட்டுள்ளதாக டெல்லியிலிருந்து செய்திகள் கசிந்து வருகிறது.