கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை கன்னட நடிகர் சிவராஜ்குமார் நிறைவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்றான “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்ற அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க சிவராஜ்குமார், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் மூன்று காலகட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தில் கடந்த ஆறு மாதங்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவருக்கான படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்து இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த மாத இறுதியில் முடிவடையும் என்றும் தனுஷின் பிறந்த நாளான ஜூன் 28-ம் தேதி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.