இனி ஜோதிகா கோவிலைப் பற்றி பேசினால் நாக்கை அறுப்போம் என சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டுள்ளார் அரசியல் பிரமுகர் ஒருவர்.
BJP Lawyer Warning to Jyothika : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா இவர் தஞ்சாவூரில் அரசு மருத்துவமனைக்கு ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தபோது அங்கிருந்த சுற்றுச்சூழல் படு மோசமாக இருந்ததாக விருது விழா ஒன்றில் கூறி இருந்தார்.
கோவிலை பராமரிக்க செலவு செய்வது போல பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யுங்கள் என அவர் பேசியிருந்தார்.
இனி சூர்யாவின் படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாது? – ஜோதிகாவால் வந்த சோதனை.!
ஆனால் ஜோதிகா கோவில் பற்றி பேசியது வேறுவிதமாக மாறி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஒருவர் ஜோதிகாவை தகாத வார்த்தைகளால் விமர்சித்து இனிமேல் கோவிலைப் பற்றி பேசினால் நாக்கை அறுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவரின் வீடியோவால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நடிகை ஜோதிகாவின் நாக்கை அறுப்பேன்.
– தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துராமலிங்கம்.இவர் வழுக்கி விழுவாரா.?!#2ரூவாசங்கிஸ் pic.twitter.com/mbTakx7eV7
— கிரிநாத் (@girinath_2) April 25, 2020