பிகில் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் பிகில் படத்திற்கு வந்துள்ள பிரச்சனை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருந்தது.
பொதுவாகவே விஜய் படங்கள் என்றால் இது என் கதை, உன் கதை என்ற பிரச்சனைகள் எழுவது வழக்கமான ஒன்று. இயக்குனர் அட்லீக்கும் இதுவொன்றும் புதியதில்லை.
பிகில் திரைப்படத்திற்கும் இந்த பிரச்சனை படப்பிடிப்பு தொடங்கிய போதே தொடங்கியது. இயக்குனர் கே.பி செல்வா என்பவர் பிகில் என்னுடையது என கூறி வந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது உயர்நீதி மன்றத்தில் பிகில் ரிலீசுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? படம் ரிலீஸாகுமா? ஆகாதா? என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் சினிமாவை தொற்றி கொண்டுள்ளது.