மஞ்சரி,அருண் பிரச்சனை.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

BiggBoss Season 8 Tamil Day 55 Promo 3 Update
BiggBoss Season 8 Tamil Day 55 Promo 3 Update

இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடுவில் இருக்க கோட்டை எடுத்த உடனே வீட்டுக்குள்ள புயல் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு உள்ளுக்குள்ள இருந்த ஆத்திரம் எல்லாம் டேம் உடைந்து வெளியே வர மாதிரி வந்திருச்சு.. என்னை ஏதுங்குறத போய் விசாரித்து விடுவோம்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தீபக் கேப்டன்சி சரியில்லை என்று பூ கட் பண்ணதற்கான காரணம் சொல்லச் சொல்லி விஜய் சேதுபதி சாச்சனாவிடம் கேட்க அவர் அதற்கு சரியான பதில் சொல்லாமல் இருக்கிறார். இதனால் நீ யோசித்தது தப்பா இருக்கு சாச்சனா ஒக்காரு என்று சொல்லி விடுகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அருண் மற்றும் மஞ்சரி இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி கேட்கிறார். அப்போ அருண் பேசியது தப்புனா நீங்க சிவா கிட்ட பேசியதும் தப்பு தானே என்று மஞ்சரி இடம் கேட்கிறார் அதற்கு மஞ்சரி எதுவும் பேசாமல் நிற்கிறார். இதுக்கு என்கிட்ட பதில் இல்லை என்று விஜய் சேதுபதி சொல்லிவிடுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.