meera

முகேனுக்கும் தனக்கும் இடையே நடந்ததை கூறினால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீர மிதுன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சர்ச்சையான விவகாரங்களில் சிக்கி வருபவர் மீரா மிதுன். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:

என்னையும், முகேனையும் இணைத்து பல செய்திகள் வெளிவருகிறது. நான் அவரை வைத்து புகழடைந்து வருவதாகவும் செய்திகளை போடுகிறார்கள். உண்மையில் எனக்கு அந்த அவசியமே இல்லை. முகேன் மலேசியாவை சேர்ந்தவர். தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ அவரை யாருக்கும் தெரியாது.பிக்பாஸ் வீட்டில் எனக்கும், அவருக்கும் இடையே நடந்த விஷயங்களை வெளியே கூறியிருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. எனவேதான், இத்தனை நாட்கள் அதுபற்றி பேசாமல் இருந்தேன் என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.