வனிதா தான் பெற்ற மகளையே கடத்திய புகாரின் பேரில் என்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் வனிதா. ஏற்கனவே இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.
இந்நிலையில் இவரது முன்னாள் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வனிதா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.
தெலுங்கானாவை சேர்ந்தவர் ஆனந்த ராஜ். இவருக்கும் வனிதாவுக்கு கடந்த 2012-ல் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்ட இவர்களுக்கு ஜோவிதா என்ற மகளும் உள்ளார்.
ஜூலியா இது? அடேங்கப்பா என்னவொரு மாற்றம் – அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த புகைப்படங்கள்.!
கடந்த பிப்ரவரில் வனிதா ஜோவிதாவை ஹைதராபாத்தில் இருந்து அழைத்து வந்துள்ளார், இதனையடுத்து ஆனந்த ராஜ் தன்னுடைய மகளை வனிதா கடத்தி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்போது வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் அவரை கைது செய்ய தெலுங்கானா போலிஸ் பிக் பாஸ் செட் அமைந்துள்ள பகுதியை கட்டுப்படுத்தும் நசரத் பேட்டை போலீசாரிடம் உதவி கேட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் கைதாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மோசடி புகார் காரணமாக மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே வைத்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.