ஏமாளி ஞானத்தை பளாரென அறைந்துள்ளார் ரேணுகா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஞானம் பிசினஸ் தொடங்கும் இடத்திற்கு போலீஸ் வர கரிகாலன் எஸ்ஸாகி விடுகிறான். போலீஸ் நீங்க எடுத்து வந்தது எல்லாமே கடத்தல் பொருள், அந்த கரிகாலன் ஒரு பிராடு என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இதையடுத்து குணசேகரன் விசாலாட்சிக்கு போன் போட்டு உன் புள்ளைங்க வீட்டுக்கு வரலனா போலீஸ் அள்ளி போட்டுட்டு போய்டுச்சுனு அர்த்தம் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஞானம் ஏமாற்றத்தில் நான் எங்கயாச்சும் போறேன் என்று சொல்ல ரேணுகா பளாரென அறைய அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.