மீரா மிதுனால் இறுதி நேரத்தில் பிக் பாஸ் ஓட்டில் அதிரடி மாற்றங்கள் நடந்தேறியுள்ளது.
Bigg Boss 4th Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து மூவர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
4-வது எலிமினேஷனிற்காக கவின், அபிராமி, சாக்ஷி அகர்வால், மீரா மிதுன், சேரன், சரவணன் என மொத்தம் 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.
திருமணமாகி விவகாரத்தானவரா சாக்ஷி.. யார் அவருடைய கணவர்? – ஓர் ஷாக்கிங் தகவல்.!
ஆரம்பத்தில் கவினுக்கு தான் அதிக ஓட்டுகள் விழுந்திருந்தன. அதன் பிறகு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சேரனுக்கு எதிராக மாறியதாலும் சேரன் தன்னிடம் தவறாக நடித்து கொண்டதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியதாலும் சேரனுக்கான ஓட்டுகள் அதிகமாகி அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும் சாக்ஷி அகர்வால் தான் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்றிருப்பதாகவும் அதற்கு அடுத்தபடியாக மீரா மிதுன் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த வாரம் சாக்ஷி அகர்வால் தான் வெளியேறுவார் என்று ஓரளவிற்கு உறுதியாக தகவல்கள் வெளியாகியுள்ளன.