வெண்பாவின் சதித் திட்டத்தால் அவரது பக்கம் சாய்ந்து உள்ளார் ஹேமா.

Bharathi Kannamma Episode Update 04.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த பக்கம் சௌந்தர்யா அனைவரையும் ஒன்றாக அழைத்து கேரளா மனதில் பாரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கணும் என தோன்றியதற்கு காரணம் நாம தான். அவ நம்மல பாரதியோட எதிரி மாதிரி பார்க்குறா, ‌ அவ மனதில் இருந்து எண்ணத்தை அடியோடு மாற்றணும்‌. அதுக்காக நாம இனி பாரதியோட சண்டை போடக்கூடாது அவன் எது சொன்னாலும் அமைதியா போயிடணும், அவனுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்க நல்லபடியா நடந்துக்கணும். இதை எல்லோரும் மனசுல வச்சிக்கிட்டு நடந்துக்கங்க என சொல்கிறார்.

இந்தப் பக்கம் கண்ணம்மா ஒரே மகிழ்ச்சியாக இருக்க அப்போது வந்த வாய்தா வடிவுக்கரசி என்ன ஒரே ஜாலியா இருக்க என்ன விஷயம் எனக் கேட்க பாரதி லட்சுமி ரோட்டில் திரிந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு என்னை திட்டியதாகவும் அப்பா மாதிரி பேசுறீங்க என்று சொன்னதற்கு அவளுக்கு அப்பாவா தெரிஞ்சா தெரியட்டும் அதுக்கு என்ன இப்போ என்ன சொன்னார். அவர் முழுசா ஏற்றுக்கொள் என்றாலும் அவர் சொன்ன அந்த வார்த்தை கொஞ்சம் மன நிம்மதியை கொடுத்தது என சொல்கிறார். அவரு கொள்ளவும் ஏதோ உன்மேல அன்பும் பாசமும் படிந்து இருக்கு அதை வெளியே கொண்டு வரணும் என வாய்தா வடிவுகரசி கூறினார்.

இந்தப் பக்கம் வெண்பா பாரதி என்ன நெனச்சிட்டு இருக்க இங்க வந்து கண்ணம்மாவை புடிக்காத மாதிரி நடிக்கிறா அங்க போய் ஜாலியா இருக்கான் இன்னைக்கு இந்த க்கு ஒரு பதில் தெரிஞ்சாகணும் எனது பாரதிக்கு போன் போட முயற்சி செய்கிறார் வெண்பா. இந்த நேரத்தில் தடுத்து நிறுத்திய சாந்தி இப்ப நீங்க போன் போட்டு பாரதி கிட்ட சண்டை போட்டா ஹேமாவுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயம் வராது. அப்புறம் இந்த கல்யாண கனவு நீங்க மறந்துட வேண்டியதுதான் என சொல்கிறார். இப்ப நீங்க போயிட்டு இருக்க ரூட்டு தான் சரியானது. ஹேமா மனசுல இடம் பிடிக்க பாருங்க என சொல்கிறார். நீ சொல்றதும் சரிதான் இனி பாரு என்னோட performance-அ என வெண்பா சொல்கிறார்.

பிறகு பள்ளியில் ஹேமா உட்கார்ந்து கொண்டிருக்க அவருக்கு சாப்பாடு எடுத்துச் செல்கிறார் கண்ணம்மா. இன்னைக்கு பாட்டி வர மாட்டாங்க நான் தான் சாப்பாடு எடுத்து வந்து இருக்கேன் என சொல்கிறார். இந்த நேரத்தில் வெண்பா காரில் வந்து இறங்குகிறார். உனக்கு சாப்பாடு எடுத்து வந்து இருக்கேன் என சொல்ல நான் சமையல் நம்ம கிட்டயே சாப்பிடுகிறேன் என கூறுகிறார். மேலும் வெண்பா இனிமே நீங்க சாப்பாடு எடுத்துட்டு வராதீங்க சமையல் அம்மா என கூறுகிறார். இல்ல நான் சமையல் அம்மா கிட்டயே வழக்கம்போல சாப்பிட்டுக்குறேன் என ஹேமா கூறிவிடுகிறார்.

பிறகு என்ன சாப்பாடு சமையல் அம்மா என கேட்க தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு சிப்சும் எடுத்து வந்து இருக்கேன் என சொல்ல இல்லையே வேற மாதிரி வாசனை வருதே பிரியாணி வாசனை வருது என ஹேமா சொல்ல நான் தான் பிரியாணி எடுத்து வந்து இருக்கேன். டாடிக்கு சமைச்சு எடுத்துட்டு போய் கொடுத்தேன். அவர்தான் ஹேமாவுக்கு பிரியாணியும் சிக்கன் லெக் பீஸ் ரொம்ப பிடிக்கும் எடுத்துட்டு போ என வழியனுப்பி வைத்தான் என கூறுகிறார். பிரியாணியா என ஹேமா அப்படியே வெண்பா பக்கம் சாய்கிறார்.

பிறகு சமையல் அம்மா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டாக்டர் ஆண்ட்டிகிட்ட சாப்பிட்டவா? டாடி கூட சொல்லி அனுப்பி இருக்காரு இன்னைக்கு ஒரே நாளு அவங்க கூட சாப்பிடுகிறேன் ப்ளீஸ் என சொல்லி விட்டு வெண்பா உடன் சென்று விடுகிறார். லட்சுமியை அனுப்புங்க நாங்க ஷேர் பண்ணி சாப்பிடுகிறோம். இல்ல வேணாம் ஹேமா என கண்ணம்மா சொல்லிவிடுகிறார். பிறகு வெண்பா ஹேமாவுக்கு சாப்பாடு ஊட்டி விடுவதைப் பார்த்து கண்ணம்மா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.