ஹேமாவால் வெண்பாவின் சூழ்ச்சி தெரியவர அஞ்சலி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ‌‌‌‌

Bharathi Kannamma Episode Update 06.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா பாரதியை விவாகரத்து செய்தால் உண்டு இரண்டாவது குழந்தையை தந்து விடுவதாக கண்ணம்மாவிடம் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து சென்றார்.

முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

கண்ணம்மா இது குறித்து யோசித்துக் கொண்டிருக்க அவருடைய மனசாட்சி எதிரில் தோன்றி கண்ணம்மாவிடம் பேசுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணம்மா என் முடிவை மாற்ற நினைக்காதே என கத்த உள்ளிருந்து லஷ்மி வந்து என்ன ஆச்சு என கேட்கிறார். கடவுளிடம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறி சமாளித்துக் கொள்கிறார் கண்ணம்மா.

இந்த பக்கம் அஞ்சலி வெண்பா கொடுத்த மாத்திரை தீர்ந்து போய் விட்டதாக கூறி இதனை வாங்கிப் பயன்படுத்தலாம் வேண்டாமா என யோசித்து அதன் பின்னர் வேண்டாம் என முடிவு செய்கிறார். இந்த நேரத்தில் ஹேமா அம்மா என அழைத்துக் கொண்டு உள்ளே வருகிறார். அகிலன் அப்பா இந்த மாத்திரையை உங்களிடம் கொடுக்க சொன்னார் என கூறி தீர்ந்து போன மாத்திரையை கொடுக்கிறார்.

மாடர்ன் உடையில் பிரபல விளம்பர நடிகை Ria-வின் Ramp Walk | F.A.T Fashion at Tea | Fashion Show 2021

பின்னர் அஞ்சலி போகும்போது கதவை மட்டும் மூடி விட்டு போ என கூற எதற்கு என ஹேமா கேட்கிறார். இந்த மாத்திரையை போட்டா எனக்கு நெஞ்சு வலிக்கும் மயக்கம் வரும் நான் படுத்து கொஞ்ச நேரம் தூங்குவேன் என கூறுகிறார். மாத்திரை போட்டால் நெஞ்சுவலி வருமா? உடம்பு சரியாகத்தானே மாத்திரை. போட்டா உடம்பு வலிக்கும்னா எதுக்குப் போடணும் என ஹேமா கேட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். அதன் பின்னர் அஞ்சலி மீண்டும் யோசித்து இந்த மாத்திரையை இனி போட வேண்டாம் என முடிவு செய்கிறார்.

அதன் பின்னர் வெண்பா அஞ்சலிக்கு போன் செய்து நான் கொடுத்த மாத்திரை எல்லாம் போடுறியா? சொன்ன மாதிரி இரண்டு டோஸ் தானே எடுக்கிற என கேட்கிறார். அஞ்சலியும் ஆமாம் என கூறுகிறார். மேலும் இந்த மாத்திரை போட்ட உனக்கு மயக்கம் தலைவலி ஏதாவது வருகிறதா என வெண்பா கேட்க அதெல்லாம் இல்லை இப்போ செட் ஆகிடுச்சு என கூறுகிறார். இதனால் வெண்பா அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே என நினைத்துக் கொண்டு மீண்டும் கேட்க கட்டாய மயக்கம் வரணுமா என அஞ்சலி கேட்கிறார். ஒருவழியாக சமாளித்து கொண்டு நீ சொன்னதால் நான் கேட்டேன் என வெண்பா கூறுகிறார். அதன் பின்னர் போனை கட் செய்து விடுகிறார் அஞ்சலி.

இந்த பக்கம் பாரதி தனது மகள் ஹேமாவுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த சவுந்தர்யா நம்மளோட தூக்கத்தை கெடுத்து விட்டு இவன் மட்டும் ஜாலியா இருக்கான். என்ன முடிவு எடுக்கப் போகிறான் தெரியல. இப்பவே போய் சட்டையை பிடிச்சு கேட்கப் போகிறேன் என கூற அவருடைய கணவர் வேலை அதெல்லாம் வேண்டாம் என சௌந்தர்யா கீழே அழைத்துச் சென்றுவிடுகிறார்.

கண்ணம்மா தன் வீட்டில் கர்ப்பமான போது பாரதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து பழைய நினைவுகளை நினைத்து இனி பாரதி திருந்த வாய்ப்பே இல்லை என நினைத்து அந்த போட்டோவை கிழிக்க முயல்கிறார். அப்போது பக்கத்தில் இருக்கும் லட்சுமி பாரதி அங்கிள் வாங்க வாங்க என அழைக்கிறார். அதன் பின்னர் கண்ணம்மா அந்த போட்டோவை கிழிக்காமல் உள்ளே வைத்து விடுகிறார். அதன் பின்னர் அவருடைய கபோர்டில் இருந்து பணக்கட்டு இரண்டு கீழே விழுகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.