கண்ணம்மா பற்றி லட்சுமிக்கு இன்னொரு உண்மை தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமி எழுதிக்கொண்டிருக்க அப்போது அவருடைய தாத்தா வீட்டுக்கு வர அவரிடம் பாட்டி ஏன் வரமாட்டாங்க என கேட்க கண்ணம்மாவின் அம்மா அவர் பிறந்ததுமே இறந்து போயிட்டாங்க. வீட்ல இருக்காங்க அவர்களுடைய சித்தி அஞ்சலியோட அம்மா என சொல்ல அப்போ அஞ்சலி சித்தி உண்மையாவே எனக்கு சித்தி தானா என சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு கண்ணம்மா வந்துவிட அவரைப் பார்த்துவிட்டு அவருடைய அப்பா கிளம்பி விடுகிறார். இது குறித்து லட்சுமி கண்ணம்மாவிடம் கேட்க ஆமாம் என கூறுகிறார். அப்போ பாரதி அப்பாவும் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கினாரா அவங்களுக்கு பிறந்தவ தான் ஹேமாவா என கேட்க கண்ணம்மா பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகி விடுகிறார்.

இந்த பக்கம் ரோஹித்துக்கு ஷர்மிளா போன் செய்ய அவரிடம் வெண்பா தான் வாங்கி கொடுத்த வைர நெக்லஸை ஆள் வைத்து பரிசோதனை செய்த விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு மருத்துவமனையில் கண்ணம்மா லட்சுமி என இருவரிடமும் ஜானு டீச்சர் விளையாடிக் கொண்டிருக்க அவங்களுடைய இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது உண்மைதான் என ரிப்போர்ட் மூலம் உறுதி செய்கிறார் பாரதி. பிறகு அவருடைய கணவர் ராமன் சாரிடம் இது குறித்து பேசலாம் என பாரதி சொல்ல கண்ணம்மா வேண்டாம் என சொல்ல பாரதி கோபப்படுகிறார்.

பிறகு விக்ரமும் ராமன் சாரை அழைத்து வாங்க என சொல்ல கண்ணம்மா அவரை உள்ளே அழைத்து வருகிறார். உள்ளே வந்ததுமே அவர் பதற்றத்துடன் ரிப்போர்ட் வந்துடுச்சா ஜானுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஏதாவது பிரச்சனையா ஏன் எல்லாரும் அமைதியா இருக்கீங்க என அழ தொடங்கி விடுகிறார். இதனால் பாரதி என்ன பேசுவது எனக்கு என்ன அதிர்ச்சியோடு இருக்க இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.