செழியனுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார் மாலினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு போன் செய்யும் அங்காளம்மன் கோவில் தர்மகத்தா போன் செய்து கேட்டரிங் ஆர்டர் குறித்து பேச பாக்கியா சந்தோஷம் அடைந்து நிச்சயமாக இந்த ஆர்டரை எடுத்துக் கொள்கிறேன் என கூறுகிறார்.
அடுத்து செழியன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க ஜெனி என்னலாம் இப்படி கொஞ்ச மாட்டுற என கேட்க கொஞ்சிட்டா போச்சு என செழியன் ஜெனியை கொஞ்ச அப்போது மாலினி போன் செய்ய போனை எடுக்காமல் இருக்கிறார்.
பிறகு ஆடியோ மெசேஜ் போட செழியன் ஜெனியை தூங்க வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்ப பாக்யாவிடம் சிக்கிக் கொள்ள ஏதோ சமாளித்து விடுகிறார். அதன் பிறகு பாக்கியா அந்த மாலினி எக்காரணத்தைக் கொண்டும் எந்த விஷயத்திலும் உன் வாழ்க்கையில் வரக்கூடாது என எச்சரிக்கிறார்.
மறுநாள் செழியன் தூங்கி எந்திரிக்க மாலினி போன் போட்டு ஜெனிக்கு தவறுதலாக ஒரு வீடியோவை அனுப்பிட்டேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு செழியன் பதறி ஓடிப் போய் ரூமுக்கு செல்ல ஜெனியும் மாலினி ஏதோ ஒரு வீடியோ அனுப்பி இருக்காங்க என்ன என்று ஓபன் செய்து பார்க்க செழியன் உச்சகட்ட டென்ஷன் அடைகிறார். பிறகு வெறும் ரைமிங்ஸ் வீடியோ என்பது தெரிய வருகிறது.
அதைத்தொடர்ந்து ராதிகா கோபிக்கு போன் போட்டு எங்கள பத்தி உங்களுக்கு அக்கறையே இல்லை என்று கோபப்பட இப்படி போனை பிடுங்கி அவன் நீ சந்தோஷமாக இருக்க விட மாட்டியா என திட்டி ஃபோனை வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.