கோபிக்கு செக் வைத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வீட்டுக்கு வர ராதிகா உங்களுக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு. போயிட்டு ரெடியாயிட்டு வாங்க என்று சொல்ல கோபி மயூவிடம் என்ன விஷயம் என்று கேட்க மயூவும் சொல்ல மறுக்கிறார்.

பிறகு கோபி ரெடியாயிட்டு வர ராதிகா அவருக்கு காபி போட்டு கொடுத்து நாம தி நகரில் உள்ள தங்க மாளிகைக்கு போறோம் என்று சொல்கிறார். கோபி தி நகரில் மாளிகை எல்லாம் இருக்கா என்ன என்று கேட்க நான் சொன்னத நீங்க முழுசா கேக்கல அம்மாவுக்கு கோல்ட் வாங்க போறோம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

கோபி எஸ்கேப் ஆக என்னென்னவோ முயற்சி செய்த முடியாமல் போக ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் கிளம்புகிறார். இங்கே வீட்டுக்கு வரும் செடிகள் ஜெனிக்கு புடவை வாங்கி வந்து கொடுக்க எழில் அம்மாவுக்கு வாங்கி வந்து தரணும்னு உனக்கு தோணவே இல்ல என்று கலாய்க்கிறார்.

பிறகு செழியன் பாக்யாவுக்கும் ஒரு புடவை எடுத்து கொடுக்க பாக்கியா அதை பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமல்லாமல் செழியனை கலாய்க்கவும் செய்கிறார். இந்த நேரம் பார்த்து மாலினி போன் செய்ய செழியன் முகம் மாற பிறகு பாக்கியா நீ எங்கயும் போகக்கூடாது என திட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து செழியன் வெளியே போனது எழிலிடம் இவனுடைய நடவடிக்கையை சரியில்ல அந்த மாலினி வந்தாலே இவன் முகம் மாறுது என தனது சந்தேகத்தை சொல்கிறார். அதன் பிறகு அமிர்தாவின் அப்பா அம்மா போன் பண்ணாங்களா என்று கேட்க எழில் இல்ல நானே அவங்கள போய் பாத்துட்டு வரேன் என்று சொல்ல பாக்கியா அது இல்லாம நீ போகக்கூடாது வார்னிங் கொடுத்து விட்டு உள்ளே செல்ல எழில் அம்மா ஏன் இப்படி சொல்றாங்க என்று யோசிக்கிறார்.இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.