அமிர்தாவை தேடி வீட்டுக்கு வந்துள்ளார் கணேஷ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் மாலினியை சந்தித்த செழியன் இதுவரைக்கும் நடந்த விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டு இனி நாம பார்க்கவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் இந்த ப்ராஜெக்ட்டில் கூட இனி நான் தலையிட மாட்டேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். மாலினி எவ்வளவோ பேசியும் செழியன் குட் பாய் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து பாக்கியா வீட்டுக்கு வரும் பெண்கள் பணத்தைக் கேட்டு குடைச்சல் கொடுக்கின்றனர். இன்னும் இரண்டே நாளில் பணம் வந்தாக வேண்டும் என சொல்கின்றனர். இதனால் பாக்கியம் என்ன செய்வது என தெரியாமல் குழப்பம் அடைகிறார்.
அதனை தொடர்ந்து கோபி வீட்டில் மயூவுக்கு மேத்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அப்போது பேங்கில் இருந்து இருவர் வர கோபி அவர்களை தனியாக அழைத்துச் சென்று பணத்த கட்டி விடுகிறேன் என சமாளித்து அனுப்ப ராதிகாவுக்கு சந்தேகம் வருகிறது.
பிறகு கணேஷ் ஈஸ்வரி கேட்டரிங் எங்க இருக்கு என கேட்டு கேட்டு விசாரித்து ஒரு வழியாக பாக்யாவின் வீட்டை தேடிப்பிடித்து விடுகிறார். வெளியே நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்த அமிர்தா பிறகு உள்ளே எழுந்து சென்றதும் வீட்டுக்குள் வரும் கணேஷ் அமிர்தா எழிலுடன் இருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.