செழியனுக்கு பாக்கியா செக்மேட் வைக்க கோபி அதிர்ச்சி கொடுத்துள்ளார்‌.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி செழியன் இன்னும் வராததால் பாக்யாவை போன் பண்ண சொல்ல பாக்கியா போன் செய்ய செழியன் ஹாஸ்பிடலுக்குள் வந்து விடுகிறார்.

பிறகு பாக்கியா செழியனை தனியாக அழைத்துச் சென்று நீ சரியில்ல நீ பண்றது ஏதோ தப்பா இருக்கு என எச்சரிக்கிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த பாக்யா விருது காண்ட்ராக்ட் எடுப்பதற்காக கிளம்ப ஈஸ்வரி அந்த ராதிகாவுக்கு தெரிந்த யாரும் இருக்க மாட்டாங்களா என கேட்டு இந்த கான்ட்ராக்ட் எடுத்து நீ அந்த ராதிகா முகத்துல கரிய பூசணி என சொல்லி வாழ்த்தி அனுப்புகிறார். மேலும் ஜெனியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம் என சொல்ல ஈஸ்வரி கொஞ்ச நாள் அவங்க அம்மாவோட இருக்கட்டும் என கூறுகிறார். பிறகு ராமமூர்த்தி பாக்கியாவிடம் காரணம் கேட்க செழியன் நடவடிக்கை சரியில்லை என சொல்ல அவரும் நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் என கூறுகிறார்.

அடுத்ததாக எழில் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க அப்போது அமிர்தாவும் வர நாம ஒரு குழந்தை பெத்துக்கலாமா என எழில் ஆசையாக கேட்க அமிர்தாவும் சம்மதம் சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்து பாக்கியா காண்ட்ராக்ட் எடுப்பதற்காக ஒரு கம்பெனிக்கு வர கோபி எதார்ச்சையாக அங்கு வர அது அவருடைய நண்பர் வினோத் மாமனார் கம்பெனி என்பதால் வினோத்திடம் பேசி இந்த காண்ட்ராக்டர் கொடுக்கக் கூடாது என சொல்ல வினோத் மாமனார் கான்ட்ராக்ட் கொடுக்க போகும் சமயத்தில் அதைத் தடுத்து நிறுத்தி விடுகிறார் வினோத்.

அதனைத் தொடர்ந்து பாக்யாவும் செல்வியும் வெளியே வர கோபி இந்த சிட்டி குள்ள நீ புதுசா எங்கேயும் காண்ட்ராக்ட் எடுக்கவே முடியாது எடுக்கவும் விடமாட்டேன் என கோபி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.