கோபியுடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறார் ராதிகா.
Baakiyalakshmi Serial Episode Update 13.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அமிர்தாவின் வீட்டில் இருக்கும்போது அமிர்தாவின் அப்பா நீ ஒரு உப்பு பிஸ்கட் வாங்கிட்டு வந்து தந்தையே அது வாங்கிட்டு வர்றியா என கேட்க எழில் உடனே அதை பைக்கில் இருந்து எடுத்து வந்து கொடுத்தார். அதுக்குள்ள வாங்கிட்டு வந்துட்டியா என அனைவரும் கேட்க இல்லை ஏற்கனவே வாங்கிட்டு வந்தேன் பைக்கில் இருந்தது அதுதான் எடுத்து வந்தேன் என கூறினார்.
வெந்து தணிந்தது காடு என்ற படம் பற்றி வெளியான அதிரடி அப்டேட் – வெளியான அதிரடி அப்டேட்.!!
பிறகு அமிர்தாவிடம் நாளைக்கு என்ன பிளான், கோவிலுக்கு போறிங்களா என சொல்ல ஒரு பிளானும் இல்லை என கூறுகிறார். அமிர்தாவின் அம்மா நாளைக்குத்தான் கணேஷிற்கு ஆக்ஸிடெண்ட் ஆன நாள் என கண் கலங்க எழில் அதையெல்லாம் மறந்து விடலாம் என கூறுகிறார். அதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தால் வலி நமக்குத்தான். கணேஷின் நல்ல விஷயங்களை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் என கூறுகிறார். மேலும் அமிர்தா நாளைக்கு எங்க அம்மா வராங்க என சொல்ல கூட யாரெல்லாம் வராங்கன்னு சொல்லு என அவருடைய மாமியார் செல்ல அது இப்போ வேண்டாமென அமிர்தா கூறிவிடுகிறார். பிறகு எழில் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்புகிறார்.
ஆபிசுக்கு வந்த அவரிடம் அவருடைய நண்பர் சதீஷிடம் நடந்ததை சொல்ல அவங்க அம்மாவை வச்சிகிட்டு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறாங்க. என்ன சொல்ல அதெல்லாம் வாய்ப்பில்லை எழில் கூறுகிறார். இருந்தாலும் நீ சொல்வது எல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என சொல்கிறார்.
கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா?
இந்தப் பக்கம் கோபி ராதிகாவின் வீட்டின் பெல் அடிக்க ராதிகா கதவைத் திறக்கிறார். வீட்டில் யாரும் இல்லை. கோபி ராதிகாவிடம் நான் என்னுடைய மனைவியுடன் நிச்சயமாக சந்தோஷமாக இல்லை. இரவு முழுக்க உன்னிடம் தானே பேசுகிறேன். என் மனைவி என் பக்கத்தில் இருந்தால் எப்படி பேச முடியும்? நீ இல்லாம என்னால வாழவே முடியாது. நீ என்னை என்னதான் திட்டினாலும் வெறுத்தாலும் வர வேண்டாம் என்று சொன்னாலும் நான் வந்து கிட்டு தான் இருப்பேன். நான் உன்கிட்ட நடிப்புக்காக பேசல. உண்மையான அன்பாக தான் பேசுகிறேன் அது உனக்கு ஒரு நாள் கூட புரியலையா என கூறுகிறார்.
பிறகு ராதிகாவை கட்டிப் பிடித்துக் கொள்கிறார். அவரது கையைப் பிடித்துக்கொண்டு என்னை விட்டு போயிடாத என கெஞ்சுகிறார். இந்த நேரத்தில் வெளியில் போய் இருந்த ராதிகாவின் அம்மா உள்ளே வந்து இதனை பார்த்து விடுகிறார். பிறகு கோபி ராதிகாவின் கையை விட்டு விலகிச் செல்கிறார். பின்னாடியே வந்த மய்யூ கோபியிடம் வந்து ஒட்டிக் கொள்கிறார். கோபி மய்யூவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது ராதிகாவின் அம்மா மேலே சென்று விட பின்னாடியே ராதிகா செல்கிறார். மொதல்ல அந்த ஆளை வேண்டாம்னு முடிவு பண்ணு. இல்லைனா நான் மய்யுவை கூட்டிக்கிட்டு ஊருக்குப் போய் விடுவேன் என கூறுகிறார். மேலிருந்து கீழே இறங்கி வந்த ராதிகா மய்யூ கோபிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா கோபியை என்னால மிஸ் பண்ணவே முடியாது என முடிவெடுக்கிறார்.
பிறகு காரில் நண்பருடன் சென்று கொண்டிருக்கும் போது நடந்ததை கூறுகிறார். விட்டா நீ ராதிகாவை கல்யாணமே பண்ணிக்க போல என அவருடைய நண்பர் கேட்க என்னால ராதிகா எல்லாம் இருக்க முடியாது என கூறுகிறார் கோபி. இப்பகூட ராதிகாவா பாக்கியவானு ஒரு சூழ்நிலை வந்தால் நான் கண்டிப்பா ராதிகா பக்கம்தான் சாய்வேன் என சொல்ல இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.