இனியாவின் பள்ளிக்குச் சென்ற பாக்யாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
Baakiyalakshmi Episode Update 31.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியா தன் தோழிகளுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கிறார். அதன்பிறகு பாக்கியா வந்ததும் யார் என்ன எது எனக் கேட்டது என்னுடைய பிரண்ட்ஸ் தான் பேசினாங்க அவங்க வீட்டுல இந்த விஷயம் பற்றி எந்த ஏன் பேசக்கூடாது என சொல்லியதாக கூறுகிறார். ஒருவேளை எனக்கு இந்த மாதிரி நடந்து நான் சூசைட் அட்டென்ட் பண்ணி இருந்தால் நீங்களும் இப்படித்தான் இருந்து இருக்கிறார்களா என கேட்க பாக்கியா என்ன இப்படி எல்லாம் பேசுற என பதறி போகிறார்.
மறுநாள் காலையில் இனியா எழில் மற்றும் பாக்கியா உடன் பள்ளிக்குச் செல்கிறார். நேராக மருத்துவமனைக்குச் சென்ற இவர்கள் நிகிதா பற்றி விசாரிக்க எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அதன்பிறகு பாக்கியா அவர்களது பெற்றோரிடம் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்குமாறு பேச அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். பிறகு அங்கிருந்து நேராக ஸ்கூலுக்கு வரும் இவர்கள் பிரின்ஸ்பலை நேரில் பார்க்க முடிவு செய்கின்றனர்.
ஆனால் பள்ளி முதல்வரை நேரில் பார்க்க பள்ளி ஊழியர்கள் அனுமதிக்காத காரணத்தினால் பாக்கியா அவரை பார்க்காமல் போக மாட்டேன் என அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுகிறார். இனியா தோழி மீது அபாண்டமாக பழி சொல்வதை கேட்டு அழுது கொண்டே வெளியில் செல்ல எழில் அவரை சமாதானம் செய்கிறார். இதனை பார்த்த பத்திரிகையாளர்கள் என்ன பிரச்சனை என கேட்க எனில் இந்த பிரச்சனை இருக்கு என கூறுகிறார். அதற்குள் பள்ளி ஆசிரியர்கள் ஓடி வந்து பத்திரிகையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு இவர்களை பேச விடாமல் தடுத்து விடுகின்றனர்.
இந்தப் பக்கம் வெளியே வந்த முதல்வர் பாக்கியாவிடம் என்ன பிரச்சனை உங்களுக்கு என கேட்க நிகிதா விஷயம் பற்றி பேச நீங்க சொல்வது எதுவும் உண்மை இல்லை நாங்கள் சொல்வது தான் உண்மை என கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். உங்களுக்கு எதுவும் தெரியாது என்றுதான் நினைத்தேன் ஆனால் எல்லாம் தெரிந்து கொண்டேன் ஒரு பெண்ணின் மீது பழி போடுகிறார்கள் என பாக்கியா கோபப்படுகிறார்.
இதை கவனித்த பத்திரிக்கையாளர்கள் பாக்கியா வெளியே வந்ததும் அவரை சூழ்ந்து கொள்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு என்ன விஷயம் தெரியும் சொல்லுங்க என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். நீயா மற்றும் அவரது தோழிகளை அந்தப்பக்கம் போகுமாறு சொல்லிவிட்டு பாக்கியா பத்திரிக்கையாளர்களிடம் பேச முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.