ராஜி வீட்டை விட்டு வெளியேற குழந்தையை தூக்கி வந்த ஈஸ்வரி கோவிலுக்கு போக முடிவெடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமும் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில் இன்றைய எபிசோட் ராஜீயை கண்ணன் வீட்டை விட்டு வெளியே வருமாறு மிரட்டி கொண்டிருக்க அப்பா அம்மா எல்லோரும் ராஜி பிரிய போவதை நினைத்து வருத்தப்படுகின்றனர். கல்யாண நகை எல்லாம் கொண்டு வந்து ராஜ ரூமில் வைத்து விட்டு படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லி சென்று விடுகின்றனர்.
பிறகு ரூமுக்குள் வந்த கண்ணன் ராஜியை கூப்பிட முதலில் வர மறுக்கும் ராஜி செத்துப் போயிடுவேன் என கண்ணன் மிரட்டியதால் வேறு வழி இன்றி வர சம்மதிக்கிறார். பிறகு அவள் பாத்ரூமுக்குள் சென்று இருந்த சமயத்தில் கண்ணன் பையில் இருந்த நகைகளை வாரி ராஜி துணிக்குள் வைத்து மறைத்து விடுகிறான். பிறகு ராஜியை கூட்டிக்கொண்டு வெளியேறுகிறான்.
இன்னொரு பக்கம் குழந்தையை தூக்கி வந்த ஈஸ்வரி என்னிடம் நேராக திருநெல்வேலி குலதெய்வம் கோவிலுக்கு காரை விட சொல்கிறார். செழியன் வேண்டாம் பாட்டி ஏதோ தப்பா தோணுது என்று சொல்ல ஈஸ்வரி நான் சொல்றத செய் யாருடைய ஃபோனையும் எடுக்காத நீ கோவிலுக்கு போ இது உன்னுடைய குழந்தை உனக்கு உரிமை இருக்கு உன் குழந்தை உனக்கு வேணுமா வேணாமா என செழியன் மனதை மாற்றுகிறார்.
இங்கே ஜெனி வீட்டுக்கு வந்ததும் குழந்தையை ஈஸ்வரியின் செழியனும் தூக்கிக் கொண்டு வந்து விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். ஜோசப் போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்ல மரியம் முதலில் அவங்க வீட்டுக்கு போய் குழந்தையை வாங்கிட்டு வர வழிய பாருங்க அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவு எடுக்கலாம் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.
வீட்டில் ராமமூர்த்தி மற்றும் தனியாக இருக்க அங்கு வரும் ஜோசப் செழியனையும் ஈஸ்வரியையும் தேட அவர்கள் கோவிலுக்கு போய் இருப்பதாக சொல்ல குழந்தையை தூக்கி வந்த விஷயத்தை சொன்னதும் அதிர்ச்சி அடைகிறார். உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் எல்லாரையும் உள்ள தள்றேன் என எச்சரித்து விட்டு ஜோசப் இங்கிருந்து வெளியே வருகிறார்.
பிறகு ராமமூர்த்தி இந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைந்து தொடர்ந்து செவி எனக்கு போன் பண்ணு ஈஸ்வரி ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்ய சொல்கிறார். மறுநாள் காலையில் இங்கே எல்லோரும் தூங்கி எந்திரித்து கல்யாண வேலைகளை பார்க்கத் தொடங்குகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.