வீட்டுக்காக செலவு பண்ணதை சொல்லி கோபி சண்டையிட ஈஸ்வரி எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Baakiyalakshmi Episode Update 26.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி இனியாவுக்கு சாப்பாடு எடுத்துச் சென்று ரூமுக்குச் சென்று ஏன்டா கீழே வரல யார் மேல என்ன கோபம் என கேட்கிறார். அம்மா மேலதான் கோபம் அம்மா என்னை தேவையில்லாமல் திட்டுவாங்க அடிக்கிறாங்க என சொல்ல பாக்கியாவா அப்படியெல்லாம் செய்ய மாட்டாளே என சொல்ல அந்த பிசியோதெரபிஸ்ட் பெற்ற அவரு எப்படி ட்ரீட்மெண்ட் பண்றாருன்னு பார்க்கத்தான் நான் போய் நின்னு பேசினேன். ஜெனி அக்கா நீ எதுக்கு அவர்கிட்ட வழியற என்று கேட்கிறார்கள். அம்மா என்ன அடிக்கிறாங்க இனிமேல் நான் அம்மா கிட்ட பேச மாட்டேன் என கூறுகிறார்.

நான் பாக்கியா கிட்ட பேசுறேன் இனி உன்னை அடிக்க மாட்டார், திட்ட மாட்டார். ஆனா அதுக்காக அம்மா கிட்ட பேசாம, சாப்பிடாம இருக்கக்கூடாது என கூறுகிறார். அதன்பிறகு அதன் பிறகு கீழே வந்த கோபி பாக்கியாவை உட்காரவைத்து இனியாவுக்கு உனக்கும் என்ன சண்டை. நீ அடிச்ச திட்டுனனு சொல்கிறார் என்னாச்சு என கேட்கிறார். ஜெனி கிட்ட மரியாதை இல்லாமல் பேசினான் அதனாலதான் அடிச்சேன் அதுவும் சும்மா தட்டினேன் அவ்வளவுதான்.

அந்த பிசியோதெரபிஸ்ட் கிட்ட இவை எதுக்கு தேவையில்லாம போய் பேசணும். நமக்கு எதுக்கு தேவையில்லாத பிரச்சனை அதைத்தான் ஜெனி சொல்லி இருக்கா. நான் இனியா கிட்ட பேசிட்டேன் இனிமே அவ ஒழுங்கா இருப்பா, இந்த பிசியோதெரபிஸ்ட் வர்ற நேரத்துல நீ வீட்ல இருக்கா இல்லையா எனக் கேட்க இல்லங்க சமைக்கிற இடத்துக்கு போய் விடுவேன். நிறைய ஆர்டர் எடுத்து இருக்கேன் நேரம் பத்தல என சொல்கிறார். நம்ம பொண்ண விட உனக்கு சமைக்கிறது பெரிதா போயிடுச்சா? அது என்னோட வேலை எங்க அத விட முடியாது என பாக்கியா சொல்ல என்ன பெரிய வேலை இந்த வீட்டுக்காக நீ என்ன பண்ண என சத்தம் போட ஆரம்பிக்கிறார்.

எல்லாத்தையும் நான் தானே கொடுக்கிறேன் நீ என்ன செலவு பண்ணி இருக்க? அப்பாவுக்கு லட்சம் லட்சமா செலவு பண்ணி இருக்கேன். அதெல்லாம் நீயா பண்ண? என சத்தம் போட மெதுவா பேசுங்க அத்தை காதுல கேட்டுட போகுது என பாக்கியா கூறுகிறார். கேட்கட்டும் எல்லாருக்கும் கேட்கட்டும் என கோபி சத்தம் போட்டு பேசுகிறார். நான் இந்த வீட்டுக்காக எதுவுமே செலவு பண்ணலையா என பாக்கியா கேட்க பத்து ரூபாய் இருபது ரூபாய் செலவு பண்ணத் எல்லாம் சொல்லாத அப்பாவுக்கு வீல்சேர், கட்டில் என எல்லாம் வாங்கி போட்டிருக்கேன். அந்த மாதிரி நீ என்ன செலவு பண்ண? கோபி கேள்வி மேல கேள்வி கேட்கிறார்.

நீங்க கொடுக்கிற பணம் பத்துவது இல்ல மாமாவுக்கு மருந்து வாங்க எவ்வளவு செலவாகுதுனு தெரியுமா? ஒரு நாளைக்கு வீட்ல எவ்வளவு செலவாகுது என்று தெரியுமா? போன மாதம் மட்டும் கரண்ட் பில்லு எட்டாயிரம் ரூபாய் நான் வந்து உங்க கிட்ட கேட்கல. மாமாவுக்கு மருந்து மாத்திரை வாங்க உங்க கிட்ட வந்து பணம் கேட்கல, செல்விக்கு நீங்க சம்பளம் கொடுத்து நாலு மாசம் ஆச்சு நான் வந்து உங்க கிட்ட பணம் கேட்கல. உங்க அளவுக்கு நான் செலவு பண்ண ஆனாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் செலவு பண்ணிட்டு தான் இருக்கேன் என பாக்கியா சொல்கிறார். செலவுகளை எழுதி வைத்திருக்கும் நோட்டை எடுத்துக் காண்பிக்க நீ இது வீட்டுக்காக என்ன செலவு பண்ண கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என கோபி திரும்பத் திரும்ப அதையே கேட்கிறார்.

இதையெல்லாம் ரூமில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரி தன்னுடைய நகைகளை எடுத்து வந்து பாக்கியாவிடம் நீட்டுகிறார். அய்யோ அத்தை எதுக்கு இதெல்லாம் வேண்டாம் என சொல்ல நீ இந்த வீட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படுற எவ்வளவு செலவாகிறது என்று எனக்கு தெரியும் இந்தா வாங்கிக்கோ பாக்யாவின் கையில் வைத்து விட்டு அவர் உள்ளே சென்று விடுகிறார். கோபி அம்மா அம்மா என கூப்பிட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஈஸ்வரி செய்த வேலையால் கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.