ராதிகா வீட்டிற்கு போன பாக்கியா அடுத்தடுத்து பல கேள்விகளை கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க செல்வி நான் கூட உன் மாமியார் கூப்பிட்டதும் வீட்டுக்கு போய்டுவியோனு நினைச்சேன்.

நீ அந்த வீட்டுக்கு போக கூடாது‌. அந்த வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? ஆனால் குடும்பத்தாரை நினைச்சா தான் பாவமா இருக்கு என கூறுகிறார். திடீரென ராதிகா ஞாபகம் வர பாக்கியா செல்வியிடம் ஆட்டோவை வர சொல்லு என சொல்ல செல்வி அதுக்குள்ள உன் கோவம் போய்டுச்சா? என கேள்வி மேல் கேள்வி கேட்க பொறுமை இழந்த பாக்கியா நடந்தே ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

ராதிகா இவர்களை பார்த்ததும் சாதாரணமாக வழக்கம் போல பேசி உள்ளே அழைக்க பாக்கியா நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களே ராதிகா என சொல்ல ராதிகா எதுவும் புரியாமல் நான் என்ன பண்ணேன் என கூறுகிறார். அக்காவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து போச்சு என சொல்ல ராதிகா அதிர்ச்சியாகி நான் தெரிந்தே உங்க வாழ்க்கையில வரை என கூறுகிறார். மும்பைக்கு போறேன்னு சொன்னது என்னாச்சு என கேட்க மயூவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல பாக்கியா மயூவுக்கு உடம்பு சரியில்லையா? இல்லை அவருக்கு உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்.

ராதிகா கதறி அழுது நான் தெரிஞ்சு உங்கள் வாழ்க்கையில வரல என சொல்ல பாக்கியா அதை நம்பாமல் இருக்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.