வீட்டுக்கு வந்த கோபியிடம் பாக்யா கேள்வி கேட்க அவர் கோபப்பட ஈஸ்வரி பதில் கொடுத்துள்ளார்.
Baakiyalakshmi Episode Update 22.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் காலையில் எழுந்த பாக்கியா இன்னும் கோபி வீட்டுக்கு வராததால் அவருக்கு போன் செய்ய அவர் போனை எடுக்காமல் கட் செய்து கொண்டே இருக்கிறார். இதை கவனித்த ராதிகா எடுத்துப் பேசுங்க ஏதாவது அர்ஜெண்டா இருக்கப்போகிறது என சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறுகிறார்.
பிறகு இனியா வந்து அப்பா இன்னும் வரலையே என பாக்கியாவிடம் கேட்க இப்போவாவது உனக்கு அப்பா நியாபகம் வந்துச்சே என சொல்கிறார். நேற்று மதியம் போனவர் இன்னும் வரவே இல்லை என கூறுகிறார். சரி நான் போன் பண்ணி பார்க்கிறேன் என இனியா சொல்ல நானே ரொம்ப நேரம் பண்ணிக்கிட்டு இருக்கேன் எடுக்கல நீ பண்ணா மட்டும் எடுக்கவா போறாரு என கூறுகிறார்.
ஆனால் கோபி இனியா போன் பண்ணதும் எடுத்து பேசுகிறார். பிசினஸ் பிசினஸ் வெளிய வந்து இன்னைக்கு வந்து விடுவேன் என கூறுகிறார். பாக்கியா நான் பேசுவேன் என சொல்ல கோபி அப்புறம் பேசுகிறேன் என போனை வைத்து விடுகிறார்.
அதன்பிறகு சமைக்கும் இடத்தில் இந்த ஆர்டர் எடுத்ததில் நல்ல லாபம் இந்த பணத்தை அவரிடம் கொடுக்க வேண்டும் என பாக்கியா சொல்ல இதுக்கு அவ கிட்ட கொடுக்கிற நீ உனக்கு நகை ஏதாவது எடுத்துக்க, இல்லனா இனியா பாப்பாவுக்கு எடுத்து வை. நீ பணம் எடுத்துட்டு போய் கொடுத்தா மட்டும் உன்னை பாராட்ட வா போராரு என சொல்ல அவருக்கு கடன் நெருக்கடி நான் உதவி பண்ணனும் என கூறுகிறார். எடுத்துட்டு போயிட்டு உதவி பண்ணு உனக்கு சிலை வைப்பாரு என கிண்டலடிக்கிறார் செல்வி.
இந்தப் பக்கம் எழில் சாப்பிடாமல் அமர்ந்து கொண்டிருக்க அதை தெரிந்து கொண்ட அமிர்தா அவருக்கு சாப்பாடு எடுத்து வந்து சாப்பிட வைக்கிறார். பிறகு கோபி வீட்டுக்கு வர கோபியை பார்த்த பாக்கியா எங்க போயிருந்தீங்க எதுவுமே சொல்லல எங்க இருந்தீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்க உள்ளே வந்ததுமே இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று எத்தனை முறை சொல்லி இருக்கேன். திரும்பவும் கேள்வி கேட்டுட்டே இருக்க என சத்தம் போடுகிறார். நான் எங்க போனாலும் உன் கிட்ட சொல்லிட்டு தான் போடணுமா என சத்தம் போட இதையெல்லாம் ஈஸ்வரி கிச்சனிலிருந்து கேட்டு விடுகிறார்.
பிறகு கோபியிடம் சொல்லாம கொள்ளாம நீ போனா கேட்க தான் செய்வாங்க. இது என்ன புது பழக்கமா இருக்கு நைட் எங்க போய் தங்கிட்டு வர என கேட்கிறார். இல்லமா ப்ரண்ட பார்க்க போயிருந்தேன் என கோபி சமாளிக்கிறார். எங்க அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்ல நீ தான் பொறுப்பா நடந்துக்கணும் என கூறுகிறார்.
பிறகு ஈஸ்வரி உள்ளே சென்று விட இப்ப உனக்கு சந்தோஷமா வந்ததும் அம்மாகிட்ட மாட்டி விட்ட. எப்ப வருவ எப்ப பிரச்சனை பண்ணலாம்னு காத்துகிட்டு இருக்கியா என திட்டி விட்டு மேலே சென்று விடுகிறார். பிறகு கோபி கீழே வந்து பிளாக் காபி கேட்கிறார். அப்போது ஜெனியின் அம்மா வீட்டுக்கு வந்து இருந்தாங்க செழியனுக்கும் ஜெனிக்கும் சண்டை வந்துகிட்டே இருக்கிறது பத்தி பேசுறாங்க. உங்களை நம்பி தானே கல்யாணம் பண்ணி கொடுத்தேன் அவங்க சந்தோஷமா இல்லை என சொல்றாங்க என சொல்ல அவங்க சந்தோஷமா தான் இருக்காங்க என கோபி கேட்கிறார்.
என்னங்க வீட்ல நடக்குற எதுவுமே தெரியாதது மாதிரியே பேசுறீங்க என அடிக்கடி சண்டை வந்துகிட்டே இருக்கு என பாக்கியா கூறுகிறார். அதுக்கெல்லாம் நீ தான காரணம் என கோபி சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இதனையடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் செழியன் டிவோர்ஸ் கொடுத்து விடலாம் போல இருக்கு என சொல்ல அவரை பளாரென அறைகிறார் பாக்கியா.