
பாக்கியா பணத்தை தூக்கி வீச ராதிகா அவமானப்பட்டு நிற்க கோபி வீட்டை விட்டு கிளம்ப முடியாது என ஷாக் கொடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவும் கோபியும் சேர்ந்து கொண்டு பாக்யாவை கேவலமாக பேசிவிட்டு ஆபீஸ்க்கு டைம் ஆகுது என சொல்லி கிளம்ப அப்போது ஒரு நிமிஷம் என பாக்கியா இருவரையும் நிறுத்தி ஒரு பத்து நிமிஷம் ஒதுக்க முடியுமா என்று கேட்க கோபி 10 நிமிஷத்துல என்ன நடக்க போகுது என்று கேட்கிறார்.

என்ன வேணாலும் நடக்கலாம் சார் என சொல்லும் பாக்யா குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கூப்பிட என்ன என்கிட்ட கெஞ்ச போறியா இல்ல டைம் கேட்க போறியா என கோபி ஆணவம் குறையாமல் பேச பாக்கியா உள்ளே போக வழி இங்கே இருக்கு என்று பாக்யாவை வெளியே போக சொல்ல உள்ளே போன பாக்கியா பணத்தை எடுத்து வர கோபியும் ராதிகாவும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர்.
நீங்க கேட்ட 18 லட்சம் ரூபாய் பணம் என்று பாக்கியா பணத்தை என்கிட்ட பொம்மை காசை வைத்து என்னை ஏமாற்ற பார்க்கிறாயா? என கோபி கேள்வி கேட்க ராமமூர்த்தி நீ பேங்க்கு வேலை தானே பார்க்கிற, அத வாங்கி நல்ல நோட்டா என்னன்னு பாரு என்று சொல்ல பாக்கியா நீங்க கேட்ட பணத்தை நான் கொடுத்துட்டேன், எப்ப வீட்டை விட்டு வெளியே போக போறீங்க என கேள்வி கேட்கிறார்.

இதுவரை கோபியும் ராதிகாவும் சேர்ந்து செய்த அட்டூழியங்கள் அனைத்திற்கும் பதில் கொடுக்கும் அவர் இனிமே இது என் வீடு, இங்கே இருக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது வெளியே போங்க என்று சொல்ல கோபி அப்படியெல்லாம் போக முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஏன் போக முடியாது நீங்க வீட்டை விட்டு போகணும் அதுதான் கமிட்மென்ட், நீங்க தானே இதே இடத்தில வச்சு சொன்னீங்க என்று பாக்யா கேள்வி கேட்கிறார். மேலும் ராதிகா கொடுத்த கொடைச்சல்களுக்கு பதில் அடி கொடுக்க அவர் பேச முடியாமல் நிற்கிறார்.

கோபி என் அப்பா, அம்மா, குழந்தைகளை விட்டுட்டு எல்லாம் என்னால போக முடியாது என்று சொல்ல ராதிகா உங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன போது நீங்க ஏன் அமைதியா இருந்தீங்க? போலீஸை கூட்டிட்டு வந்து இங்க பிரச்சனை பண்ணும் போது ஒன்னும் பேசாம இருந்தது ஏன் அப்ப எல்லாம் உங்க பாசம் எங்க போச்சு? உங்க பொண்ணு பிளஸ் டூ படிக்கிறா என்று தெரிந்தும் அவ ரூம்ல நீங்க வந்து தங்கிக்கிட்டு அவளை ரூம் இல்லாமல் அலைய விட்டீங்களே அப்போ எங்க போச்சு உங்க பாசம்? உங்க டிராமாவை எல்லாம் இதோட நிறுத்திக்குங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
மேலும் ராதிகாவிடம் எனக்கும் இந்த ஆளுக்கும் தான் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனால் இவங்க எல்லாம் என்னுடைய குடும்பம் அத்தை மாமா என் புள்ளைங்க நான் இங்கதான் இருப்பேன் நீங்க இங்க இருக்க கூடாது, எப்ப கிளம்புறீங்க என கேள்வி கேட்க கோபி அதெல்லாம் போக முடியாது என்று சொல்ல ராமமூர்த்தி பணத்தை கேட்டீங்க என் மருமக கொடுத்து விட்டால் எடுத்துட்டு வெளியே போடா, நீ இல்லனா தான் நாங்க சந்தோஷமா இருப்போம் பணத்தையும் வாங்கிட்டு இதே வீட்டில் டாரா போடலாம் என்று நினைக்கிறாயா? உனக்கு வெட்கமா இல்லையா என கேட்டு அவமானப்படுத்துகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
