ராதிகாவின் கணவர் வீட்டுக்கு வந்ததால் பதறிப் போய் உள்ளார் பாக்யா.
Baakiyalakshmi Episode Update 11.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அமிர்தாவின் வீட்டுக்கு போன எழிலிடம் தாத்தா பற்றி விசாரிக்கின்றனர். எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறார் பிரச்சனையும் எதுவும் இல்லை என கூறுகிறார் எழில். மேலும் தன்னுடைய தாத்தா எல்லோரையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என் அம்மாவை பெத்த பொண்ணு மாதிரி பார்த்துப்பார் என கூறுகிறார். அதை பார்க்கும்போதே தெரியுது என அமிர்தாவின் அப்பா சொல்கிறார்.
பிறகு நிலா பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். பக்கத்துல ஒரு மால் இருக்கு அங்க குழந்தைகள் விளையாட நிறைய விஷயம் இருக்கு அங்க ஒரு நாள் பாப்பாவை கூட்டிட்டு போகலாம் என எழில் சொல்கிறார். பிறகு அமிர்தா பாட்டு பாடி குழந்தையை தூங்க வைக்கிறார். அமிர்தா பாடுவதைக் கேட்ட இனி என்னுடைய படத்தில் ஒரு பாட்டு இருக்கு அதை நீங்கதான் பாடறீங்க என கூறுகிறார். சினிமாவுல எல்லாம் பாட முடியாது என அமிர்தா சொல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல நீங்கள் பாடுங்க என எழில் கூறுகிறார். அமிர்தாவின் அம்மாவும் நீ பாடு என சொல்கிறார்.
இந்தப் பக்கம் ஈஸ்வரியின் அவருடைய கணவரும் வெளியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது ஈஸ்வரி ஊருக்கு போகலாமா அங்க போயிட்டு இருக்கலாம் என சொல்ல அவருடைய கணவர் வேண்டாம் என தலையை ஆட்டுகிறார். இந்த நேரத்தில் பாக்கியா வார ஈஸ்வரி ஊருக்கு போகலாமா வேணாம்னு சொல்கிறார் என கூறுகிறார். அதெல்லாம் வேண்டாம் அத்தை இங்க தான் நிறைய ஆஸ்பிட்டல் இருக்கு, பிசியோதெரபி வராரு. மாமாவுக்கு கொஞ்சம் குணமானதும் ஊருக்கு போகலாம் என சொல்கிறார். அதுக்கு இல்ல அங்க 4 மனுஷங்களை பார்ப்பார் என ஈஸ்வரி சொல்ல இப்ப என்ன மாமா 4 மனுஷங்களை பார்க்கணும் அவ்வளவுதானே என அவரை அழைத்துச் சென்று வீட்டு வாசலில் அமர வைக்கிறார்.
ரோட்டில் போற வரவங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராமமூர்த்தி. ஈஸ்வரி உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். பாக்கியா மிளகாயை எடுத்து வைத்து விட்டு வருகிறேன் என மேலே செல்கிறார். கோபி அப்பா மட்டும் தனியாக அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் ராதிகாவின் கணவர் வருகிறார். கோபி ராதிகா வீட்டுக்கு வருவதையும் அவரை கல்யாணம் பண்ணிக்க போவதாக அவர்கள் சொன்னதையும் சொல்லி உங்க புள்ளைய கண்டித்து வைக்க மாட்டீங்களா. அவரும் ராதிகாவும் எப்படினா போகட்டும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல ஆனா என் பொண்ணுக்கு நான்தான் அப்பா உங்க பையன் எப்படி அப்பாவாக முடியும் என கோபப்படுகிறார். உங்க பையன் கிட்ட சொல்லி வையுங்கள் வெட்டி போட்டு விடுவேன் என சத்தம் போடுகிறார்.
ஏதோ சத்தம் கேட்கிறது என ஈஸ்வரி மற்றும் பாக்கியா இருவரும் வெளியே ஓடி வருகின்றனர். உடனே ராமமூர்த்தி சத்தம் போட்டு பிரச்சினையை திசை திருப்புகிறார். பிறகு யார் நீங்க என கேட்க ராதிகாவின் கணவர் அமைதியாகவே இருக்கிறார். ஈஸ்வரி நீ போலீசுக்கு போன் போடு என சொல்ல அங்கிருந்து ராஜேஷ் கிளம்பிவிடுகிறார். பிறகு கோபியின் அப்பாவை உள்ளே அழைத்துச் சென்று விடுகின்றனர்.
யார் இவர் என பாக்கியா படிக்கட்டில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க ஒருநாள் வீட்டிற்கு வந்து சண்டை போட்டது எழில் அவரை வெளியே தள்ளியது நினைவிற்கு வருகிறது. பிறகு இந்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்கிறார் பாக்கியா. இதை கோபியிடம் சொல்லலாமா என கேட்க வேண்டாம் அவனுக்கு ஏற்கனவே ஆயிரம் டென்ஷன் என சொல்லி விடுகிறார் ஈஸ்வரி.
இந்த பக்கம் ராதிகா மயூராவை படிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி கையில் கிப்ட்டுடன் வீட்டிற்கு வருகிறார். பிறகு நீ கேட்ட கிப்ட் இந்த என கொடுக்கிறார். நீங்க எப்ப இங்க வருவீங்க எங்களோடவே இருப்பீங்க என மயூ கேட்ட சீக்கிரமே எல்லாம் நடக்கும் என கூறுகிறார். பிறகு மயூ உள்ளே எழுந்து சென்றுவிட ராதிகா விவாகரத்து நோட்டீஸ் கையெழுத்து வாங்கி விட்டீர்களா என கேட்கிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.