ராதிகாவுக்கு மல்லிப்பூ வாங்கி கொடுத்த கோபியை நேரில் பார்த்த அவரது அப்பாவால் ராதிகா வீட்டில் பூகம்பம் வெடித்தது.
Baakiyalakshmi Episode Update 09.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியா காலையில் எழில் உடன் பார்க்கிற்கு வாக்கிங் சென்றிருந்தார். அப்போது பாக்கியா என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தேன் என கேட்டார். 40 வயது ஆகிவிட்டாலே வாக்கிங் போகணும் என எழில் கூறினார். அந்த நேரத்தில் இருவர் பாக்கியாவை பார்த்து விட்டு நேரில் வந்து நீங்க ஈஸ்வரி மசாலா விளம்பரத்தில் நடித்த அவங்க தானே? நீங்க நடிகையா எந்த சீரியல்ல நடிக்கிறீங்க? உங்க நடிப்பு சூப்பரா இருந்துச்சு என பாராட்டுகின்றனர்.
ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பாக்யாவுக்கு ஒரே ஆச்சரியம் அதுகுள்ள இவ்வளவு பிரபலம் ஆகி விட்டேனா என எழிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இன்னும் இரண்டு பேர் வந்து மீண்டும் ஆகியவை பாராட்ட அவருக்கு ஒரே குஷி ஆகி விடுகிறது. எழில் நேத்து நைட்டுதான் வீடியோ போட்டு அதுக்குள்ள இவ்வளவு பேர் பார்த்துட்டாங்க. அதுக்கு அப்புறம் உன்கிட்ட ஆட்டோகிராஃப் எல்லாம் வாங்குவாங்க என கூறுகிறார். உன்னோட லெவலே வேற மாதிரி ஆகிவிடும் என சொல்கிறார்.
இதனையடுத்து பாக்கியா கோபி நடக்கும் பார்க்கிற்கு அவரை பின் தொடர்ந்து வருகிறார். அவருக்கு முன்பாக நம்மைப் பார்த்து யாராவது வந்து பேசுவார்கள் பாராட்டுவார்கள் என பாக்கியா நினைக்கிறார். பிறகு வேகமாக ஓடிச்சென்று கோபியை இடித்துவிட அவர் இடியட் எனத் திட்டுகிறார். பிறகு தான் தெரிகிறது அது பாக்கியா என. பிறகு இருவரும் சேர்ந்து வாக்கிங் செல்ல அப்போது பாக்கியா யாராவது வந்து பாராட்டுவாங்க என நினைக்க யாரும் வராததால் கோபியிடம் சொல்லி புலம்புகிறார். கோபி அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு அதெல்லாம் விடு நான் சொல்றேன் நீ நல்லா தான் நடித்திருந்த. கொஞ்ச நாள் வெயிட் பண்ணு எல்லாருக்கும் தெரியும் என கூறுகிறார். சரி நீ வீட்டுக்கு போ நான் வாக்கிங் போயிட்டு வருகிறேன் என பாக்கியாவை அனுப்பி வைக்கிறார் கோபி.
இதனையடுத்து கோபி ராதிகாவுடன் காரில் சென்று கொண்டிருக்க ராதிகா ஒரு நிமிஷம் காரை நிறுத்துங்க வீட்டுக்கு பூ வாங்கிக் கொள்கிறேன் என சொல்ல நீ இரு நான் வாங்கிட்டு வருகிறேன் என கோபி மல்லி பூ வாங்கிட்டு வருகிறார். இந்த நேரத்தில் அவரது அப்பா பார்த்து விட இவன் வீட்டுக்கு எதுவும் வாங்கிட்டு வர மாட்டான் யாருக்கு பூ வாங்குகிறான் என ஓரமாக நின்று பார்க்கிறார். காருக்குள் சென்று கோபி கையில் பூவை எடுத்து நான் வச்சு விடவா என ராதிகாவிடம் கேட்கிறார். ராதிகா இது சாமிக்கு வாங்கினது என சொல்கிறார். இருவரும் தொட்டுத்தொட்டு பேசியதைப் பார்த்த கோபியின் அப்பா இவன் இன்னும் திருந்தலையா என கோபப்படுகிறார். இவனுக்கு இன்னைக்கு இருக்கு என காரை பின் தொடர கார் அங்கிருந்து கிளம்பி விடுகிறது.
எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy
ராதிகா வீட்டிற்கு வந்ததும் ராதிகா உள்ளே போனா மய்யூ என்னை விட மாட்டா, அவளை வெளியே வரச்சொல்லி பூவை கொடுத்துவிட்டு நாம ஷாப்பிங் கிளம்பிடலாம் என கூறுகிறார். கோபியும் சரி என சொல்கிறார். பிறகு மய்யு வெளியே வந்து பூவை வாங்கி கொள்கிறார். மேலும் ராதிகாவிடம் நான் மியூசிக் கிளாஸ் அட்டன் பண்ண போறேன். ஒரு மணி நேரம் கிளாஸ் இருக்கு. போன் பண்ணா போன் எடுக்க மாட்டேன் என கூறி விடுகிறார். பிறகு பாட்டியிடம் பூவை கொடுத்துவிட்டு அவரிடம் எனக்கு கிளாஸ் இருக்கு கத்தாதீங்க எனக்கு கேட்காது எட்செட் போட்டுட்டு இருப்பேன் எனக்கூறிவிட்டு மேலே செல்கிறார்.
கோபியின் அப்பா தெரு முனைக்கு வரும் நேரத்தில் அங்கிருந்து கோபி ராதிகாவுடன் ஷாப்பிங் கிளம்பிவிடுகிறார். இவளை விட்டுப் போகத்தான் வந்தேன் இன்னைக்கு இருக்கு என நேராக ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ராதிகா என சத்தம் போட அவருடைய அம்மா யாரு நீங்க என கேட்கிறார். என்ன தெரிஞ்சவங்கதான் நீங்க யாரு என கோபியின் அப்பா கேட்க நான் ராதிகாவின் அம்மா என கூறுகிறார். ராதிகா உண்மையாகவே வீட்ல இல்லையா என கேட்கிறார். இருந்தா இருக்கான்னு சொல்லப் போறேன் நீங்க யாரு என கேட்க இங்கே அடிக்கடி வந்துட்டுப் போறான் கோபி அவனோட அப்பா என கூறுகிறார். இதனால் ராதிகாவின் அம்மா அதிர்ச்சி அடைய இத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இதனையடுத்து வெளியான புரோமோ வீடியோவில் ராதிகாவும் கோபியும் வீட்டிற்கு வந்ததும் ராதிகாவின் அம்மா இவரோட அப்பா இங்க வந்து கண்டபடி பேசி போனாரு. நான் என் புள்ளைய கண்டுகொண்டேன் உங்க பொண்ணு கண்டிச்சு வையுங்க என சொல்லிவிட்டு போனார். என் பொண்ணு ஒன்னு தரம் கெட்டு போயிட்ட இல்ல தயவு செய்து இனி இத வீட்டுக்கு வராதீங்க வெளியே போங்க என கோபி வெளியே அனுப்புகிறார். நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.