உண்மை தெரிந்த பாக்கியா அதிர்ச்சியுடன் வீட்டுக்கு செல்ல குடும்பத்தார் கோபி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யா கோபி மற்றும் ராதிகாவுக்கு இடையே இருக்கும் உறவை தெரிந்து கொண்ட நிலையில் அதே அதிர்ச்சியில் ரோட்டில் நனைந்தபடி நடந்து செல்கிறார். கண் விழித்த கோபியிடம் உங்க மனைவி ராதிகா கிளம்பிட்டாங்களா என கேட்க கிளம்பிட்டாங்க என கூறுகிறார். ரொம்ப பதட்டமா வந்தாங்க உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொல்ற வரைக்கும் அவங்க நார்மலாவே இல்லை என நர்ஸ் சொல்வதைக் கேட்டு கோபி சந்தோஷப்படுகிறார். ஆனால் பாக்கியா அந்த விஷயத்தைப் பற்றி நர்ஸ் எதுவும் கேட்கவில்லை.

அதன் பிறகு கோபி வீட்டுக்கு போன் போட்டு செழியனிடம் தனக்கு ஆக்சிடென்ட் ஆகி மருத்துவமனையில் இருப்பதாக சொல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்து கோபியை பார்க்க கிளம்புகின்றனர்.

இந்த பக்கம் பாக்கியா மழையில் நனைந்தபடி சிக்னலில் வந்து சுற்றி நடப்பது எதுவும் தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்க வாகன ஓட்டிகள் அனைவரும் சத்தம் போடுகின்றனர். பிறகு டிராபிக் போலீஸ் அவரை அப்புறப்படுத்துகிறது. மருத்துவமனைக்குச் சென்ற எல்லோரும் கோபியை பார்த்து நலம் விசாரிக்கின்றனர். நீங்க போன் பண்ணி டென்ஷனா பேசுது வேகமாக கார் ஓட்டி வந்து ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்ன கோபி சொல்ல ஈஸ்வரி கண்கலங்கி அழுகிறார். எதுக்காக போன் பண்ணுங்க என கேட்க இனியா உண்மையை சொல்ல வந்த நிலையில் ஈஸ்வரி இப்போது வேண்டாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என கூறி விடுகிறார்.

இந்த பக்கம் பாக்கியா அப்படியே நடந்து வீட்டுக்கு செல்ல அவருடைய மாமனார் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.