Web Ads

கோபி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி சொன்ன வார்த்தையால் ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

baakiyalakshimi serial episode update 05-12-2024

baakiyalakshimi serial episode update 05-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என அனைவரும் பேசிக்கொண்டிருக்க உங்க மாமியாரு கோபியை கூட்டிட்டு வந்து பாத்துக்க சொன்னா என்னக்கா பண்ணுவ என்று சொல்ல அவங்க அப்படி சொல்ல மாட்டாங்க அப்படி சொன்னாலும் நான் பாத்துக்க மாட்டேன் என்று சொல்லுகிறார்.

ஆனா இப்போ இப்படி பேசுற நடு ராத்திரில போய் சேர காப்பாத்தி அட்மிட் பண்ற வரைக்கும் பதட்டமாவே இருந்தா என்று சொல்ல ஒரு உடம்பு சரியில்லாத ஆள் எப்படி இருந்தாலும் நான் அப்படிதான் இருந்திருப்பேன் என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் பாக்யா எல்லோருக்கும் காபி கொடுக்க செழியன் வருகிறார். என்னடா வந்துட்ட என்று ஈஸ்வரி கேட்க அங்க ஒருத்தருக்கு மேல இருக்க விட மாட்டாங்க அப்புறம் எதுக்கு என்று பாக்யா பதில் சொல்லுகிறார் என்று சொல்ல அங்க ரெண்டு மூணு பேர் இருந்தாலே அவ உள்ள நுழைஞ்சிட்டு வா இப்ப ஒரே ஆளு அதுவும் எழில சொல்லவே வேணாம் என்று குழம்ப ஆரம்பிக்கிறார்.

அதற்கு பாக்யா இப்ப வேணா நீங்க தடுக்கலாம் ஆனால் டிஸ்சார்ஜ் ஆனா அவர் அங்க தானே போவாரு அதை எப்படி உங்களால தடுக்க முடியும் என்று கேட்க அதற்கு ஈஸ்வரி கோபி அங்க போவான் என்று யார் சொன்னது கோபி இங்க தான் கூட்டிட்டு வருவேன் என்று முடிவெடுக்கிறார் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஆனால் பாக்யா அது ஒரு பொழுதும் நடக்காது என்று ஈஸ்வரியிடம் சொல்லுகிறார். நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாம் ஆனா கண்டிப்பா கோபி இங்கே தான் கூட்டிட்டு வருவேன் என்று சொல்லுகிறார். ஆனால் ஈஸ்வரி இப்பவே என் பையன் இவ்வளவு செத்துப் பொழச்சி வந்து இருக்க அவகிட்ட என்னால அனுப்ப முடியாது இன்னும் ஒன்னு நான் பாத்துக்க சொல்ல நான் பார்த்துப்பேன் என்று முடிவு எடுக்க, நீங்க வேணும்னா அங்க போய் பார்த்துக்கோங்க என்று சொல்ல அப்ப என்ன வீட்டை விட்டு போக சொல்றியா என்று சொல்லி திட்டுகிறார். நீங்க என்ன வேணா பண்ணுங்க ஆனா கோபிநாத் உள்ள வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் பாக்யா

பிறகு ஈஸ்வரிய செழியனை கூப்பிட்ட கோபியின் ஹாஸ்பிடல் செலவுக்கு காசு கொடுக்க நான் பாத்துக்கிறேன் பாட்டி என்று செழியன் சொல்லுகிறார். உடனே ஜெனி வெளியில் வந்து செழியன் இடம் இதே ஆண்ட்டி செலவு பண்ண கேட்கும் போது நீ எதுவுமே கொடுக்கல ஆனா அவங்களுக்கு மட்டும் தர ஆனா அவங்களுக்கு கொடுக்கறதை நான் தப்புன்னு சொல்லல அவங்களுக்கும் ஏதாவது ஹெல்ப் பண்ணிருக்கலாமே என்று சொல்லுகிறார்.

பிறகு அதெல்லாம் உனக்கு தெரியாது என்று சொல்லி சென்று விடுகிறார். மறுபக்கம் ராதிகா கோபியை பார்க்க செல்கிறார். அங்கே இப்பதான் உனக்கு டைம் கிடைச்சதா என்று கேட்க நான் விஷயம் தெரிஞ்சு அப்பவே வந்தேன். ஆனா என்னை யாரும் உள்ள விடல என்று சொல்லுகிறார். பிறகு கோபி பாக்கியா பற்றியும் குடும்பத்தார் பற்றியும் பெருமையாக பேச ராதிகா அமைதியாக நிற்கிறார்.

எனது ஈஸ்வரி வர ராதிகா என்ன சொல்லப் போகிறார்? கோபியின் முடிவு என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 05-12-2024

baakiyalakshimi serial episode update 05-12-2024