நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் எமி ஜாக்சன் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். வெளியான முதல் பாடத்திலேயே அனைவரது மனதிலும் இடம் பிடித்த இவர் விக்ரமின் தாண்டவம், ஐ, தனுஷின் தங்க மகன், விஜயின் தெறி போன்ற முன்னணி பிரபலங்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி வந்தார். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினியின் 2.0 ஆகும்.

அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளாமலேயே காதலனுடன் குழந்தை பெற்று இல்லற வாழ்கையில் பிஸியாக இருந்த எமி ஜாக்சன். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் காதலனை பிரிந்து தற்போது புது காதலர் உடன் வாழ்ந்து வருகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் எமி ஜாக்சன் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதன்படி எமி ஜாக்சன் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கம் இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புது காம்போவை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வம் காட்டி இருக்கின்றனர்.