Browsing tag

womens

சினிமாவில் வேலை நேரம்: தீபிகா படுகோன் கருத்துக்கு ராஷ்மிகா ஆதரவு..

ஒவ்வொரு துறையிலும் வேலைநேரம் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சினிமா துறையில் வேலை நேரம் என்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது. பாலிவுட்டில் தீபிகா படுகோன் ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருந்தார். எட்டு மணி வேலை நேரம் மற்றும் சம்பளம் காரணமாக அப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. தற்போதுதான் அவருக்குப் பதில் ஆலியா பட் இணைந்துள்ளார். தற்போது வேலை நேரம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தெரிவிக்கையில், ‘தனக்கும் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்’ என கூறியுள்ளார். ராஷ்மிகா நடித்த […]

தீபிகா படுகோன் கருத்துக்கு, நவாஸுதின் சித்திக் வரவேற்பு?

பாலிவுட் சினிமாவில் நடிகை தீபிகா படுகோன் ‘தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும்’ என கூறியது தொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார், நவாஸுதின் சித்திக். அவர் நடித்த ‘தம்மா’ திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது. ‘எனக்கு அதைப் பற்றி (தீபிகா சொன்னது பற்றி) அதிகம் தெரியாது. அந்தக் கருத்தை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால், எது சவுகரியமாக வேலை நேரமாக இருக்கிறதோ. அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். […]

சினிமாவில் தினமும் 8 மணிநேரம் பணி: தீபிகா படுகோன் ஆதங்கம்..

சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின. தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக தீபிகா படுகோன் பதிலளித்துள்ளார். ‘இந்திய […]

நடிகைகள் அமிஷா படேல் காத்திருப்பு; வேதிகா ஆத்திரம்..

விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘எனக்கு பொருத்தமான ஹீரோ இன்னும் என் அருகில் வந்ததில்லை. திருமணம் செய்ய வரும் இளைஞர்கள் எல்லாரும் என்னை விட பாதி வயசு. இவர்களிடம் இருந்து தான் அதிக திருமண அழைப்புகள் வருகிறது. என் தொழில் வாழ்க்கைக்காக […]

பழம்பெரும் நடிகைக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது..

பழம்பெரும் நடிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு.. தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களாக நடிகர் சங்கப் பொதுக்குழுவில் மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர். அதன்படி, இந்த வருடப் பொதுக்குழுவில் மூத்த நடிகை எம்.என்.ராஜத்துக்கு விருது வழங்க உள்ளனர். நடிகை எம்.என்.ராஜம், 1950 முதல் 1960-களின் இறுதிவரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக ரத்தக்கண்ணீர், […]

ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக, நடிகை நவ்யா நாயருக்கு லட்சம் ரூபாய் அபராதம்..

ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண மலை​யாளி​கள் கூட்டமைப்பு சார்​பில், கடந்த 6-ம் தேதி மெல்​போர்ன் நகரில் ஓணம் பண்​டிகை கொண்​டாடப்பட்​டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தின​ராக பங்​கேற்றார். இவ்விழா​வில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் மெல்​போர்ன் நகருக்கு விமானத்​தில் சென்றார். அப்​போது அவர் ஒரு முழம் மல்லிகை பூவை கைப்பை​யில் எடுத்​துச் சென்​றார். மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நவ்​யா​வின் உடைமைகளை அந்த நாட்டு அதி​காரி​கள் சோதனை செய்​தனர். அப்​போது அவரது கைப்​பை​யில் ஒரு முழம் மல்​லிகை பூ […]

பாலியல் உறவு குறித்து ‘பேர்ட் கேர்ள்’ பட இயக்குநர் வர்ஷா வாய்ஸ்..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’ நாளை வெளியாகிறது. வர்ஷா இயக்கியுள்ளார். இப்பட டீஸருக்கு பெரும் எதிர்ப்பு உருவானது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து, தற்போது வெளியாகவுள்ளது. ‘பேட் கேர்ள்’ குறித்து வர்ஷா தெரிவிக்கையில், ‘இந்தப் படம் பல நாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. 13 நாடுகளின் விழாக்களுக்கு பங்கேற்று வந்திருக்கிறேன். ’பேட் கேர்ள்’ படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக, இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு […]

இதுதான் எனது கடைசிப்படம்: இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு..

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பேட் கேர்ள்’ படம் சர்ச்சையாகி உள்ளது தெரிந்ததே. இந்நிலையில், இது தொடர்பாக வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘தனது தயாரிப்பில் வெளியாகும் கடைசிப் படம் இது தான்’ என தெரிவித்துள்ளார். ‘தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. இயக்குநராக இருப்பது ஜாலியாக இருக்கிறது. இயக்குநர் வேலையை சரியாக செய்தால் போதும். அதுவே தயாரிப்பாளராக இருந்தால் படம் சம்பந்தப்பட்ட அனைவருமே என்ன பேசுகிறார்கள், நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது இருக்கிறது. ஏனென்றால், அனைத்துமே […]

கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டாம்: ‘பேட் கேர்ள்’ பட இயக்குநர் பேச்சு..

‘பேட் கேர்ள்’ படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் என்பது தெரிந்ததே. இப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி அதுவே பெரிய விளம்பரமாகவும் ஆகியுள்ளது. வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில, நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் குறித்து, இயக்குநர் வர்ஷா பரத் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பேட் கேர்ள் படத்தை தயாரித்தவர்கள், படத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், டிரெய்லரை வெளியிட்டவர்கள் உள்பட அனைவரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் […]

வெற்றிமாறன் தயாரித்த படத்தில், 37 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு..

‘எம்பிரான்’ படத்திற்கு வந்த சோதனையைப் போல, தற்போது ‘மனுஷி’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இப்படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றிமாறன் […]