Browsing tag

suriya

இசைஞானி இளையராஜாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ‘கருப்பு’ படக்குழு! ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிக்கை

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி இசைஞானி இளையராஜாவின் ரசிகர்களிடமும், சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இளையராஜாவிடம் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சி: தயாரிப்பு நிறுவனம் விளக்கம் இளையராஜாவை காயப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “மதிப்பிற்குரிய […]

சூர்யாவின் கருப்பு திரை விமர்சனம்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. பல்வேறு தடைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். சென்னையின் ஏழுகிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு செல்வாக்கு மிக்க வழக்கறிஞராக இருப்பவர் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி). சட்டத்தின் மூலம் நீதி தேடி வரும் சாதாரண மக்களிடம் பணம் பறிப்பதும், அதிகாரம் உள்ளவர்களை காப்பாற்றி லாபம் அடைவதும் […]

நீதிக்காகப் போராடும் ‘கருப்பு’: சூர்யா – ஆர்.ஜே.பாலாஜி மோதும் அதிரடி ட்ரெய்லர் வெளியீடு!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூகக் கருத்துகளுடன் கூடிய ஜனரஞ்சகமான படங்களைக் கொடுக்கும் ஆர்.ஜே.பாலாஜி, முதன்முறையாக சூர்யாவை வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். 2 நிமிடம் 45 விநாடிகள் ஓடும் இந்த ட்ரெய்லர், படத்தின் கதைக்களம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது.   […]

“நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன்!” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா உருக்கம்

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரசிகர்களிடையே உரையாற்றினார். மதுரை மண்ணுடனான தனது பிணைப்பு மற்றும் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். மதுரை மண்ணுக்குக் கடன்பட்டுள்ளேன் விழாவில் பேசிய சூர்யா, “மதுரை எனக்கு எப்போதும் ஸ்பெஷல். இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண் தெய்வங்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்ட இந்த மதுரை […]