என்றுமே விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்: அஜித் விளக்கம்..
நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை நிகழ்த்தி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர் விவகாரம் குறித்து அஜித்குமார் தெரிவித்த பேட்டி வைரலானது. அஜித் கூறுகையில்,’ ‘கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் […]