Browsing tag

life

என்றுமே விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்: அஜித் விளக்கம்..

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை நிகழ்த்தி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர் விவகாரம் குறித்து அஜித்குமார் தெரிவித்த பேட்டி வைரலானது. அஜித் கூறுகையில்,’ ‘கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் […]

விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை எது தெரியுமா?

ஒவ்வொருவரும் நிறைவேறாத ஆசை இருக்கும். அவ்வகையில், விஷ்ணு விஷால் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதேதி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷனின்போது,​​ விஷ்ணு விஷால் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில், ‘தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் ‘மின்னல் முரளி’ படம் வந்தது. பின்னர், ‘லோகா’ […]

துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்: வைரலாகும் நிகழ்வு..

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமார் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக கார் ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில், அஜித்தின் […]

தன்னைப் பற்றிய கிண்டல் பதிவுக்கு, சூரி செம பதில், வைரல்..

தமிழ்த்திரையில் தொடக்கத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் சூரி. விடுதலை, கருடன், மாமன் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தார். தற்போது, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூரி தனது சொந்த பந்தங்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் கீழ் ஒருவர் ‘திண்ணைல கிடந்தவனுக்கு […]

ரசிகர்களின் பாராட்டு பற்றி, ருக்மணி வசந்த் கருத்து..

‘பாராட்டுகள் தற்காலிகமானவை’ என கூறியுள்ளார். ருக்மணி. இது பற்றிக் காண்போம்.. கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாராட்டுகள் தற்காலிகமானவை. அவை […]

ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த ‘டீசல்’ படக்கதை என்ன தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. டீசல் மாஃபியாவின் நிழல் உலக விளையாட்டுகளை மையமாகக் கொண்டு, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் வருகிற17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் 24 மணி நேரத்தில் உலகம் ஸ்தம்பித்துவிடும். இதுவரை யாரும் சொல்லாத டீசல் மாஃபியாவின் அறியப்படாத கதைகளை இந்தப் படத்தில் கூறியுள்ளோம்’ என்கிறார் டீசல் பட இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி. இது தொடர்பாக அவர் கூறியதாவது, […]

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு: நயன்தாரா நெகிழ்ச்சி..

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக முத்திரை பதித்து வருபவர் நயன்தாரா என்பது தெரிந்ததே. மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு […]

தனது வெற்றிக்கு காரணம்: பிரதீப் ரங்கநாதன் விளக்கம்..

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், ‘உங்களது வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதீப் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே யோசித்து வருகிறேன். அதில் எல்லாவற்றிலும் எனக்கு கிடைக்கும் அன்பு முக்கிய காரணம். என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் […]

சினிமாவில் தினமும் 8 மணிநேரம் பணி: தீபிகா படுகோன் ஆதங்கம்..

சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின. தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக தீபிகா படுகோன் பதிலளித்துள்ளார். ‘இந்திய […]

ஒருவார கால ஆன்மீகப் பயணம்: இமயமலை நோக்கி ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை நோக்கி ஆன்மீகம் பயணம் மேற்கொள்வது தெரிந்ததே. அவ்வகையில், அவரது தற்போதைய பயணம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ […]