Browsing tag

investigation

ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: கோர்ட்டில் ரவிமோகன் வழக்கு..

கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை துவங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒப்பந்தப்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாகக் […]

பிரபல நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை நாடு முழுவதும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், தமிழகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பல இடங்களில் கடந்த சில வருடங்களாக பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திலும் சோதனையானது நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் விசாகனிடம் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் […]

நடிகர் மகேஷ்பாபுவுக்கு, நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிகழ்வு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, ராஜமவுலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ்பாபு இருந்து வருகிறார். அவர் வரும் விளம்பரத்தைப் பார்த்து, பாலாபூர் […]

தவறு செய்து விட்டேன்: நடிகர் ஸ்ரீகாந்த் வேதனை- போலீசார் விசாரணை விவரம்

தமிழ்த்திரையில் சசி இயக்கத்தில் உருவான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக அவருக்கான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், தற்போது, போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ என கூறியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த் தனது ஜாமீன் மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்தை, எழும்பூர் பெருநகர குற்றவியல் 14-வது நீதிமன்ற நடுவர் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, […]

பிரபலங்களின் வலைத்தளங்கள் ஹேக்-தீர்வு என்ன?: ஸ்ருதிஹாசன் டென்ஷன்

டிஜிட்டல் உலகில், ஏன் இந்த விளையாட்டு? இதற்கு முற்றுப்புள்ளி எப்போது? என்ற தகவல்கள் பார்ப்போம்.. கமல்ஹாசனின் இரு மகள்களில் ஸ்ருதிஹாசன் காதல், பிரிவு, பேச்சு என்பதெல்லாம் வரும் தகவல்கள் ரீதியாக தெரிந்ததே. ஸ்ருதி, தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘கூலி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தனது டென்ஷனை வெளிப்படுத்தி உள்ளார். எவ்வாறெனில், ‘என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். […]

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது: திரையுலகில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் ‘ரோஜா கூட்டம்’ படம் மூலமாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகி தொடர்ந்தார். தற்போது சினிமா பிஸியில் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீ காந்த் மீது போதைப்பொருள் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அவர் 40 முறை போதைப் பொருள் வாங்கியது தெரிய வந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் குமார் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் […]

நடிகர் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஆர்யா, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஆர்யா தற்போது ‘அனந்தன் காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. நடிப்பது மட்டுமின்றி ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ‘அமர காவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘ரெண்டகம்’, ‘கேப்டன்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட […]

நடன இயக்குனர் சங்கத்தலைவர் தினேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டு; அடிதடி, போராட்டம்..

நடன இயக்குநர் தினேஷ் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் சங்கத் தலைவர் தினேஷ் மீது, தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ராஜு சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றிய தினேஷ், கடந்த 25 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும், லோக்கல் சரக்கு, நின்னு விளையாடு, […]

எனது மரியாதையை குறைக்கும் வகையில் போலியாக மார்ஃபிங்: நடிகை கிரண் புகார்..

‘பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார் கிரண். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகை கிரண் வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், மறுபுறம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். சப்ஸ்கிரைபர் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்து, அவருடைய எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சாட்டிற்காக கட்டணத்தை வசூலித்ததாக தகவல் வெளியானது. அவர் மீது வதந்திகளும், சர்ச்சைகளும், வந்த வண்ணம் […]

இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. டாஸ்மாக் மதுபான விற்பனை விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தியது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்தது. அண்மையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத் […]