Browsing tag

AR Rahman

“நான் பிறந்தது சென்னையில் தான்”- பெத்தி பட விழாவில் நடிகர் ராம்சரண் பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட விளையாட்டு பின்னணித் திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படம், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் வாழ்க்கைப் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு, உணர்வுகள், ஆக்‌ஷன் மற்றும் ஊக்கமூட்டும் தருணங்கள் கலந்த இந்தப் படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் […]

ராமாயணா காவியம்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெளியானது ‘க்ளிம்ப்ஸ்’ (Glimpse)!

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில், இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.   திரைப்படத்தின் சிறப்பம்சங்கள்: நட்சத்திர பட்டாளம்: ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் இராவணனாக யஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை ஜாம்பவான்கள்: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மர் (Hans Zimmer) ஆகிய இருவரும் இணைந்து […]

‘பெத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சூப்பர் ஹிட் – 46M+ பார்வைகளுடன் டிரெண்டிங்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்த ‘பெத்தி’ (Peddi) படத்தின் ‘ரை ரை ரா ரா’ அறிமுகப் பாடல் – 46.1 மில்லியன் பார்வைகளுடன் தென்னிந்திய சாதனைகளை தகர்த்தது ! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடனமாடுவது மட்டும் அல்ல, திரையை முழுவதும் தனது ‘ரிதம்’ மூலம் ஆளும் தனித்துவமான ஸ்டைல் கொண்டவர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான பெத்தி படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியானபோது, அவரது கிரேஸ், […]

ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்​னி​யின் செல்​வன்’ 2-ம் பாகம் படத்​தில் இடம்​பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவ​காரத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்​திய பாரம்​பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்​புரிமை வழக்கு தொடர்ந்தார். அதை விசா​ரித்த டெல்லி உயர்நீதி​மன்​றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்​டம்​பரில் விடு​வித்​தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்​தார். அந்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு மீண்​டும் விசா​ரித்​தது. ஏ.ஆர்.ரகுமான் […]

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்..

பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்​ஸ்​லி, ராஜேந்​திரன், சுவாமி​நாதன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மனோஜ் நிர்​மலாதரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரகுமான் இசையமைத்​துள்​ளார். பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் ஏ.ஆர்.ரகுமான் பாடி​யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்​படத்​தில் இருந்து வெளி​யான ‘ஏத்​து’ வீடியோ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. அதில் பிரபுதேவா கடின​மான நடன அசைவு​களை எளி​தாக ஆடி ரசிக்க வைத்​துள்​ளார். இப்​பாடல் வெளி​யான 2 வாரங்​களி​லேயே யூடியூப்​பில் 11 மில்​லியன் […]

நரேஷ் ஐயர் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் ரகுமான்..!

நரேஷ் ஐயர் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான் அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்கார் விருதுகள் தேசிய திரைப்பட விருது பத்மபூஷன் என அனைத்து அவார்டுகளையும் அள்ளி உள்ளார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் பாடகர் நரேஷ் குறித்த சுவாரசிய தகவல்களை ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார் அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு […]

ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு, தஸ்லிமா நஸ்ரின் பதிலடி..

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் வசிக்கும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ‘ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம். அவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றவர். நான் கேள்விப்பட்டவரை, அவர் மற்ற இசையமைப்பாளர்களைவிட அதிக சம்பளம் வாங்குபவர். அவர், ஒருவேளை மிகவும் பணக்கார இசையமைப்பாளராக இருக்கலாம். தான் முஸ்லிமாக இருப்பதால், பாலிவுட்டில் தனக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை என்று அவர் குறை கூறுகிறார். ஷாருக்கான் இன்னமும் பாலிவுட்டின் பாட்ஷாவாக இருக்கிறார். சல்மான் கான், […]

யாரையும் புண்படுத்த ஒருபோதும் நினைத்ததில்லை: ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம். படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலையைத் தேடி நான் செல்​வ​தில்​லை. வேலை என்​னைத் தேடி வரவேண்​டுமென விரும்​பு​கிறேன். எனது நேர்​மை​யான பணி​யால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்​பு​கிறேன்’ என்​றார். […]