விஜய்க்கு போன் செய்து சஞ்சயின் நலம் விசாரித்துள்ளார் தல அஜித்.
Ajith Phone Call to Vijay : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
தளபதி விஜயின் மகனான சஞ்சய் அவர்களும் மேற்படிப்பிற்காக கனடா சென்று அங்கிருந்து வீடு திரும்ப முடியாமல் இருந்து வருகிறார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக இதனை அறிந்த அஜித் உடனே விஜய்க்கு போன் செய்து சஞ்சய் எப்படி இருக்கிறான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது? என நலம் விசாரித்துள்ளார்.
இதற்கு விஜய், சஞ்சய் பாதுகாப்பாக தான் இருக்கிறான். ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை நண்பா என பதிலளித்துள்ளார்.