பிரபல நடிகையான சுகன்யா மீண்டும் சின்னத்திரையில் என்டர் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து பல்வேறு படங்களும் நடித்துள்ளார்.
அதன் பிறகு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியவர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரை வெள்ளித்திரை என எதிலும் தலை காட்டாமல் இருந்து வந்த சுகன்யா தற்போது மீண்டும் சின்னத்திரையில் அடுத்த இன்னிங்ஸை தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர் நடிக்க உள்ள சீரியல் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.