கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடிய பணிப்பெண் விஷயத்தில் ஷோபனா அதிரடி முடிவெடுத்தார்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை சோபனா. சென்னையில் தேனாம்பேட்டையில் வசித்து வரும் இவரது இல்லத்தில் தனது தயாரை பார்த்துக் கொள்வதற்காக விஜயா என்ற பணிப்பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார்.
வீட்டில் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் காணாமல் போனதால் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக வேலை பார்த்து வரும் விஜயா மீது நடிகை சோபனா சந்தேகப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் விஜயாவை விசாரணை செய்தபோது வறுமையின் காரணமாக நான் தான் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடினேன் என ஒப்புக் கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 41 ஆயிரம் ரூபாய் வரை பணம் திருடியதாக தெரிவித்துள்ளார்.
பணிப்பெண் விஜயா செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் நடிகை சோபனா கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் விஜயாவை தொடர்ந்து தன்னுடைய வீட்டில் வேலை செய்ய அனுமதி அளித்துள்ளார். மேலும் திருடிய பணத்தை சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
நடிகை சோபனாவின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.